Tamilnadu

News March 17, 2024

விளவங்கோடு வேட்பாளர் யார் ?

image

விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தசூழலில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா, மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் சர்மிளா ஏஞ்சல், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால் சிங், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ் ஆகியோர் சீட் கேட்டு மேலிடத்திடம் காய் நகர்த்தி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News March 17, 2024

புதுச்சேரியில் துணை ராணுவ படையினர் குவிப்பு

image

மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேர்தல் காலகட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும் புதுச்சேரி போலீசாருடன் புதுச்சேரிக்கு வந்த துணை ராணுவ படையினருடன் புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 17, 2024

தென்காசியில் அதிகாரிகளோடு ஆட்சியர் ஆலோசனை

image

தென்காசி, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன் ஏற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது.

News March 17, 2024

புதுகை: வீடுகளை தேடி பாஜகவினர் பிரச்சாரம்

image

புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் பயனடைந்த பொதுமக்களின் பட்டியலுடன் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஏவிசிசி. கணேசன் பிரச்சாரத்தை துவங்கி வைத்தார், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் ஆகிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News March 17, 2024

நாமக்கல்: வழிகாட்டு நெறிகள் விளக்க கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில் வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் வழிகாட்டு நெறிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகள் மூலம் பொதுத் தேர்தலை சுமூகமாகவும், ஆரோக்கியமாகவும் நடத்திட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

News March 17, 2024

நீலகிரி: குடிநீர் குறித்து கலெக்டர் ஆய்வு

image

நீலகிரி ஆட்சியாளர் அலுவலகத்தில், நீலகிரி குடிநீர் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் மு.அருணா தலைமையில் (மார்ச் 16) மாலை நடந்தது. கோடை வெயில் தாக்கத்தால் நீர் நிலைகள் வறண்டு வரும் சூழல் நிலவுகிறது. இதனால் மக்களுக்கு ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பது குறித்து அலுவலர்களுடன் விவாதித்தார்.

News March 17, 2024

அறிவிப்பு: 15 துணை கலெக்டர்கள் அதிரடி மாற்றம்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் உள்பட 15 துணைக் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வருவாய் துறை செயலாளர் ராஜா ராமன் பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துகிருஷ்ணன் மதுரை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News March 17, 2024

கடலூர் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை

image

நாடாளுமன்ற தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கடலூர் மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூருக்கு வரும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்து, வாகனத்தில் பணம், பரிசுப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று சோதனை செய்தனர்.

News March 17, 2024

அரக்கோணம்: மான் மாமிசம் விற்பனை செய்த 2 பேர் கைது

image

சோளிங்கர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் ஆர்கே பேட்டை அடுத்த ராஜா நகரம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவருக்கு இரண்டு கிலோ மான் மாமிசம் விற்பனை செய்தார். தகவலின் பேரில் ஆற்காடு வனத்துறையினர் அர்ஜுனன், மதன்குமார் ஆகியோரை இன்று கைது செய்தனர். முன்னதாக சோளிங்கர் வட்டாட்சியர் தேவி முன்பாக இரண்டு பேரும் ஆஜர் படுத்தப்பட்டனர்.

News March 17, 2024

சேலம்: விதி மீறிய 168 பேரின் லைசன்ஸ் ரத்து

image

சேலம் சரகத்தில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன தணிக்கையின் போது அதிக வேகமாக வாகனம் ஓட்டிய 37 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த 11 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 10 ஓட்டுநர்கள், சிக்னலை மீறி இயக்கிய 41 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 35 பேர், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 27 பேர் என 168 பேரின் லைசென்ஸ் மூன்று மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!