India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் தருவதை தடுப்பதற்காக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் நேற்று அமைக்கப்பட்டது . அதைத் தொடர்ந்து இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பணியாற்றுவதற்கான குழுவினர் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நேற்று புறப்பட்டனர். அவர்களுடன் வீடியோ கேமரா மேன் மற்றும் போலீசார் சென்றனர்.
சிவகங்கை, திருப்பத்தூரில் மக்களவை தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் நாம் தமிழா் கட்சியினா் ஈடுபட்டனா். சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளராக வி.எழிலரசி அறிமுக நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, கட்சியினருடன் வாகனங்களில் மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்துக்கு சென்று நினைவுத் தூண், மருதிருவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தர்மபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் விவரம்; 1.மாவட்டத் தேர்தல் அலுவலர் கலெக்டர் சாந்தி கைபேசி எண்- 9444161000 2.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம்- 9884447581 3.மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சிஸ் ராஜ்குமார் -9445000908 4.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது – 9445008135 இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மா.தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியராக பணியாற்றிய குருசந்திரன் என்பவர் பதவி உயர்வு பெற்று மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாறுதலில் சென்று விட்டார். இந்த நிலையில் புதிய கோட்டாட்சியராக சுகுமாரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரை சக அலுவலக அதிகாரிகள், வட்டாட்சியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கோவையில் நாளை (மார்ச்.18) பாஜக சார்பில் பிரதமரின் ரோட் ஷோ நடைபெற உள்ளது. ரோட் ஷோ நடைபெறும் வழி முழுவதும் பாஜகவினர் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த கலைஞர் யுஎம்டி ராஜா, பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பாஜகவின் சின்னமான தாமரையில் மோடியின் உருவத்தை வரைந்து வெல்கம் மோடி ஜி எனவும், மலர்ந்த முகமே வருக எனவும் வரைந்து அசத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப் அவர்கள் நேற்று (16.03.2024) துவக்கி வைத்து கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த ஆணை பிறப்பித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவருடைய அலுவலகத்தில் பொதுப்பணி துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.இதில் துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமார், கிரி, சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பல்வேறு கட்சி கொடிக் கம்பங்கள் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் நேற்று இரவு பேருந்து நிலையத்தில் இருந்த அதிமுக,திமுக,பாஜக உள்ளிட்ட கட்சி கொடிக் கம்பங்களை வருவாய் துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Sorry, no posts matched your criteria.