India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஏ.சி.சண்முகம் உங்களுக்கு கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வேலூரில் நீங்கள் செய்த பணிக்கு உங்களை வாழ்த்துகிறேன். மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் பாராளுமன்றத்தை அடைவீர்கள் தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
திருவாரூர் 2024 பாராளுமன்ற தேர்தல் நாளை ( 19.04.24) வெள்ளிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அணைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்ட வாக்காளர்களுக்கு திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாருஸ்ரீ ‘நாங்க Ready! நீங்க Readiys?” . என அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள 1357 வாக்குச்சாவடி மையங்களில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினர் அடங்கிய 1642 நபர்கள் என மொத்தமாக 2206 நபர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் இன்று தெரிவித்தார்.
புதுவை 100 அடி ரோடு ஜான்சி நகரில் முருகேசன் பைனான்சியர் என்பவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று சோதனை நடத்தி உரிய ஆவணம் இல்லாமல் இருந்த ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டு என ரூ.1 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் செல்லாத ரூ.2 ஆயிரம் நோட்டை ரூ. 1 கோடி அளவில் வைத்திருப்பது ஏன் என்றும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் ஆணைப்படி நாளை தேர்தல் நாளன்று வணிக, வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது என்றும் நாமும் நம்மிடம் பணிபுரியும் ஊழியர்களும் ஜனநாயக கடமையை ஆற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்றும் நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், பயன்படுத்தும் காகிதங்கள் என ஸ்டேஷனரி பொருட்களைக் கொண்டு செல்ல ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் செல்லும்.
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஏப்ரல்.18) கோவை மாவட்டத்தில் 3096 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறிப்பிட்ட மையத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இந்த இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்.
Sorry, no posts matched your criteria.