India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏற்கனவே 1950 டோல் ஃப்ரீ என் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 18004252735 டோல் ஃப்ரீ எண்ணுக்கும் அதேபோல் லேண்ட்லைன் நம்பரான 04322-229860, 229870, 229880 என்ற எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் தெற்கு பகுதி நான்காவது மண்டலம் 57 ஆவது வார்டு சிவசக்தி நகர் மற்றும் குறிஞ்சி தெருக்களில் குடிநீர் தொட்டிகளை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் நேற்று(மார்ச்.16) குடிநீர் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு வந்தது. 57 ஆவது வட்ட செயலாளர் ஐசக் முன்னிலையில் மண்டல குழு தலைவர். காமராஜர் திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் 04286-280081, 04286-280082, 04286-280083, 04286-280084 ஆகிய தொலைபேசி எண்களிலும், 18004257021 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
திருப்பூர், உடுமலை அனைத்து மகளிர் காவல் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களிடையே
குழந்தை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்ற கருத்து அடிப்படையில் தனியார் திருமண மண்டபத்தில் திறனறி போட்டிகள் இன்று நடைபெற்றன. இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி அணிகுதிச்சான் ஊராட்சி பூவாணிப்பட்டில் 2023 – 2024 திட்டத்தின் கீழ் ரூ.222.00 லட்சம் மதிப்பீட்டில் முழுநேர கூடுதல் பொது நூலக கட்டுமான பணிக்கு நேற்று (மார்ச்.16) சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் .
இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் தருவதை தடுப்பதற்காக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் நேற்று அமைக்கப்பட்டது . அதைத் தொடர்ந்து இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பணியாற்றுவதற்கான குழுவினர் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நேற்று புறப்பட்டனர். அவர்களுடன் வீடியோ கேமரா மேன் மற்றும் போலீசார் சென்றனர்.
சிவகங்கை, திருப்பத்தூரில் மக்களவை தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் நாம் தமிழா் கட்சியினா் ஈடுபட்டனா். சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளராக வி.எழிலரசி அறிமுக நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, கட்சியினருடன் வாகனங்களில் மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்துக்கு சென்று நினைவுத் தூண், மருதிருவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தர்மபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் விவரம்; 1.மாவட்டத் தேர்தல் அலுவலர் கலெக்டர் சாந்தி கைபேசி எண்- 9444161000 2.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம்- 9884447581 3.மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சிஸ் ராஜ்குமார் -9445000908 4.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது – 9445008135 இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மா.தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியராக பணியாற்றிய குருசந்திரன் என்பவர் பதவி உயர்வு பெற்று மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாறுதலில் சென்று விட்டார். இந்த நிலையில் புதிய கோட்டாட்சியராக சுகுமாரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரை சக அலுவலக அதிகாரிகள், வட்டாட்சியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.