Tamilnadu

News March 17, 2024

புதுகை: வீடுகளை தேடி பாஜகவினர் பிரச்சாரம்

image

புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் பயனடைந்த பொதுமக்களின் பட்டியலுடன் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஏவிசிசி. கணேசன் பிரச்சாரத்தை துவங்கி வைத்தார், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் ஆகிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News March 17, 2024

நாமக்கல்: வழிகாட்டு நெறிகள் விளக்க கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில் வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் வழிகாட்டு நெறிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகள் மூலம் பொதுத் தேர்தலை சுமூகமாகவும், ஆரோக்கியமாகவும் நடத்திட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

News March 17, 2024

நீலகிரி: குடிநீர் குறித்து கலெக்டர் ஆய்வு

image

நீலகிரி ஆட்சியாளர் அலுவலகத்தில், நீலகிரி குடிநீர் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் மு.அருணா தலைமையில் (மார்ச் 16) மாலை நடந்தது. கோடை வெயில் தாக்கத்தால் நீர் நிலைகள் வறண்டு வரும் சூழல் நிலவுகிறது. இதனால் மக்களுக்கு ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பது குறித்து அலுவலர்களுடன் விவாதித்தார்.

News March 17, 2024

அறிவிப்பு: 15 துணை கலெக்டர்கள் அதிரடி மாற்றம்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் உள்பட 15 துணைக் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வருவாய் துறை செயலாளர் ராஜா ராமன் பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துகிருஷ்ணன் மதுரை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News March 17, 2024

கடலூர் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை

image

நாடாளுமன்ற தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கடலூர் மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூருக்கு வரும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்து, வாகனத்தில் பணம், பரிசுப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று சோதனை செய்தனர்.

News March 17, 2024

அரக்கோணம்: மான் மாமிசம் விற்பனை செய்த 2 பேர் கைது

image

சோளிங்கர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் ஆர்கே பேட்டை அடுத்த ராஜா நகரம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவருக்கு இரண்டு கிலோ மான் மாமிசம் விற்பனை செய்தார். தகவலின் பேரில் ஆற்காடு வனத்துறையினர் அர்ஜுனன், மதன்குமார் ஆகியோரை இன்று கைது செய்தனர். முன்னதாக சோளிங்கர் வட்டாட்சியர் தேவி முன்பாக இரண்டு பேரும் ஆஜர் படுத்தப்பட்டனர்.

News March 17, 2024

சேலம்: விதி மீறிய 168 பேரின் லைசன்ஸ் ரத்து

image

சேலம் சரகத்தில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன தணிக்கையின் போது அதிக வேகமாக வாகனம் ஓட்டிய 37 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த 11 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 10 ஓட்டுநர்கள், சிக்னலை மீறி இயக்கிய 41 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 35 பேர், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 27 பேர் என 168 பேரின் லைசென்ஸ் மூன்று மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

News March 17, 2024

தர்மபுரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

தருமபுரியில் வாட்ஸ்ஆப் முகநூல், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ கால்களுக்கு பதில் அளிக்க வேண்டாம், அதன் மூலம் உங்களுக்கு அசாதாரண சூழ்நிலை மற்றும் அச்சுறுத்தி பணம் பறிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட காவல் துறை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நேற்று X பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

News March 17, 2024

திண்டுக்கலில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று மார்ச்.17 வெளியிட்ட அறிக்கையில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் எனவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் விண்ணப்பம் செய்யலாம் எனவும் படிவம் 6- ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம், மேலும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

News March 17, 2024

வேளச்சேரியில் 120 நாய்கள் மாநகராட்சி மீட்பு

image

வேளச்சேரியில் ஆண்டாள் அவென்யூ தெருவை சேர்ந்தவர் ஹேமலதா. இவரது வீட்டில்,100-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்த நிலையில், அதன் குரைக்கும் சத்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கம்பக்கத்தினர், நாய்களை மீட்டுச் செல்ல கோரி கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், 120 நாய்களை மாநகராட்சி  அதிகாரிகள் நேற்று மீட்டனர்.

error: Content is protected !!