Tamilnadu

News March 17, 2024

சேலம்:  வெயிலால் வெறிச்சோடிய சாலை

image

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமையான இன்று வெயில் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் இருப்பதினால் ஆத்தூர் பிரதான சாலை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

News March 17, 2024

தஞ்சாவூர் ஆட்சியர் ஆலோசனை

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினருடன் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (17.03.2024) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

News March 17, 2024

 மூளை சாவடைந்தரின் உடல் உறுப்புகள் தானம்

image

நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், விவசாயி. இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

News March 17, 2024

திருச்சி ரயில்வே முக்கிய அறிவிப்பு

image

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஏற்றுக்கொள்ளப்படாத காரணங்களுக்காக தொடர்ந்து அபாய சங்கிலியை இழுப்பதாக புகார் வருகிறது. மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும், சங்கிலி இழுப்பு சம்பவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் அது தண்டனைக்குரியதாக கருதப்படும் என எச்சரித்துள்ளது.

News March 17, 2024

திருப்பதி கோயிலுக்கு சென்ற வாலிபர் மாயம்

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம், ஊராட்சி உப்ரபாளையம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (36). இவர் கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் தேதி நண்பர்களுடன் ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீட்டிற்கு இதுவரை திரும்பி வராததால் பொன்னேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 17, 2024

இறைச்சி கடைகளில் ஆய்வு

image

திருவாரூர், கூத்தாநல்லூர் நகராட்சியில் செயல்படும் மீன் மற்றும் இறைச்சி கடைகளை கூத்தாநல்லூர் நகர்மன்ற துணை தலைவர் எம்.சுதர்சன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூத்தாநல்லூர் பகுதியில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் ரமலான் மாத நோன்பை கடைப்பிடிப்பதால், அவர்களுக்கு சுகாதார முறையில் அன்றாடம் வரும் மீன் இறைச்சிகளை நல்ல முறையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News March 17, 2024

கடலூரில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம்

image

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தங்கராஜ் தலைமை தாங்கினார்.இதில் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து கலெக்டர் விளக்கி பேசினார்.இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாவட்டம் வருவாய் அலுவலர் ராஜசேகரன் கலந்து கொண்டனர்.

News March 17, 2024

விளவங்கோடு வேட்பாளர் யார் ?

image

விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தசூழலில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா, மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் சர்மிளா ஏஞ்சல், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால் சிங், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ் ஆகியோர் சீட் கேட்டு மேலிடத்திடம் காய் நகர்த்தி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News March 17, 2024

புதுச்சேரியில் துணை ராணுவ படையினர் குவிப்பு

image

மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேர்தல் காலகட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும் புதுச்சேரி போலீசாருடன் புதுச்சேரிக்கு வந்த துணை ராணுவ படையினருடன் புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 17, 2024

தென்காசியில் அதிகாரிகளோடு ஆட்சியர் ஆலோசனை

image

தென்காசி, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன் ஏற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது.

error: Content is protected !!