Tamilnadu

News March 17, 2024

லாரி மோதி விபத்து – ஓட்டுநர் கால் நசுங்கின

image

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி மீது பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிப்பர் லாரி ஓட்டுநர் சுந்தர் என்பவரின் இரு கால்களும் நசுங்கின.  இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2024

ஈரோடு: வட மாநில வாலிபர் சடலம் கண்டெடுப்பு

image

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு, இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் நிர்வாணமாக இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த ஈரோடு சூரம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2024

குறை தீர் நாள் கூட்டம் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

image

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, பிரதி வாரம் திங்கட்கிழமை அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டமானது மறு தேதி அறிவிக்கும் வரை ரத்து செய்யப்படுவதாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 16) அறிவித்துள்ளார்.

News March 17, 2024

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய தகவல்

image

நெல்லை மாவட்டத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். இந்நிலையில், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படமாட்டாது என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 17) தெரிவித்தார்.

News March 17, 2024

புதுவை: எல்லைப் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று(மார்ச்.17) செய்தியாளர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் முழுவதும் 72 மணி நேரத்திற்குள் அரசியல் தொடர்பான பேனர்கள், சுவரொட்டிகளை அகற்ற அரசியல் கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் – தமிழகம் எல்லை சோதனை சாவடிகளில் பறக்கும்படை மற்றும் போலீசார் சோதனை பணியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

News March 17, 2024

தென்காசி: தெருநாய்கள் தொல்லை!

image

தென்காசி, சுரண்டை பழைய மார்க்கெட் பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதுடன் அப்பகுதிகளில் செல்லும் பொதுமக்களை விரட்டுவதும் , துரத்தி கடிப்பதுமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மக்களின் நலனை கருதி சுரண்டை நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News March 17, 2024

புதுகை வனப்பகுதிகளில் தீத் தடுப்பு அவசியம்

image

புதுக்கோட்டை மாவட்ட வனப்பகுதிகளில் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்பும் மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அவசியம் என தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று(மார்ச்.16) நடைபெற்ற  வனப்பகுதிகளில் தீ கட்டுப்படுத்துதல் தொடா்பான அனைத்துத்துறை அலுவலா்களை கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2024

பள்ளிபாளையத்தில் நாய் கடித்து 15 பேர் காயம்

image

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், அதிக அளவு தெரு நாய்கள் சுற்றுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 15 நபர்களை தெரு நாய் கடித்தது. நாய் கடித்து  பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒன்பது பேர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

News March 17, 2024

கோவை முழுவதும் நடவடிக்கை!

image

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் தற்போது துவங்கியுள்ளன. அதன்படி, அண்ணா சிலை சிக்னல் அருகே இருந்த பெருந்தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலை மூடப்பட்டது. மேலும் பல்வேறு மேம்பாலங்களில் வரையப்பட்ட அரசியல் சார்ந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கை கோவை முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

News March 17, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 1660 வாக்குச் சாவடிகள்

image

நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியில் சங்ககிரி இராசிபுரம் சேந்தமங்கலம் நாமக்கல் பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன இவற்றில் 7,04,270 ஆண்கள் 7,39,610 பெண்கள் மற்றும் 156 இதர பிரிவினர் ஆக மொத்தம் 14,44,036 வாக்காளர்கள் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 1660 வாக்குச் சாவடிகள் உள்ளன என தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா தெரித்துள்ளார்.

error: Content is protected !!