India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று வெள்ளகோவில் கொள்முதல் நிலையம் செயல்பட்டது. ஒரு கிலோ முருங்கைகாய் 12 ரூபாயுக்கு கொள்முதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த அவர், அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகத்தினர் அவருக்கு பூர்ண கும்பம் மரியாதையுடன் வரவேற்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.
உதகை அருகே உல்லாடா கிராமம் உள்ளது . இந்திய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை மணாகம் அறக்கட்டளை மற்றும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை இணைந்து திருச்செங்கோடு பகுதியில் நீர் நிலைகளின் பராமரிப்பு பற்றிய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.சென்னை எக்ஸ்னோரா அமைப்பின் வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்ட நீர் நிலைகளை பராமரிக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள் துணிப்பை வாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
கோவை மாவட்டம் கரடிமடை சுற்றுக்குட்பட்ட பச்சாபாளையம், தீத்திபாளையம், கரடிமடை, பேரூர், போஸ்டல் காலனி ஆறுமுககவுண்டனூர் ஹைடெக் சிட்டி பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இருசக்கர வாகனத்திலும் தனியாக நடந்து செல்வதையும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பாக தெரிவித்துள்ளனர்.
பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 23ஆம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டமும் நடக்கிறது.
குமரி மாவட்டம் மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சேவியர்குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன், ஜஸ்டிஸ் ரோக் ஆகிய 3 பேர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நேற்று(மார்ச் 17) பாளை., சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷரவன்குமார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லோக்சபா தொகுதியில் உள்ள பகுதிகளில் தேர்தலை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் தேர்தலை அமைதியான முறையில் நடத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
மதுரை தெற்கு மண்டலத்திற்குபட்ட சுடலை முத்து பிள்ளை தெரு ஶ்ரீ நாகர்சாமி கோவிலில் இன்று 54ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பரத நாட்டிய கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பாரத நாட்டியமாடி அசத்தினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் முகேஷ் ஷர்மா நாட்டியமாடிய மாணவிகளை பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.