India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செக்கானூரணியிலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
ஆலம்பட்டி பாரதியார் நகரில் பேருந்து சென்றபோது சாலை ஓரத்தில் உள்ள தனியார் கிளப்புடன் கூடிய பார் அருகே நின்று கொண்டிருந்த ஒரு மர்ம நபர் காலி பீர் பாட்டிலை பஸ்சின் பக்கவாட்டு ஜன்னல் மீது வீசினார். இதில் பயணி அமுதவல்லி என்ற பெண் காயமடைந்தார். அடாவடி செய்த மர்மநபரை போலீசார் தேடுகின்றனர்.
‘குறுகியகால பயிர்களை ஊக்குவிக்க ஏப்ரல், மே, ஜூனில் நிலக்கடலை 30 எக்டேரிலும் , உளுந்து 15 எக்டேரிலும் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவசாயிகள் தேர்வு திருப்பரங்குன்றம் பகுதியில் நடக்கிறது. தேர்வாகும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும். இதன் மூலம் கோடையிலும் விவசாயிகள் வருமானம் ஈட்டலாம் என வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் கதிரியக்கத் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில் குமார். இவர் கண்டுபிடித்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கதிரியக்க சிகிச்சையை துல்லியமாக அளிக்க உதவும் ‘புளோரசன்ஸ் மாா்க்கருக்கு ‘ மத்திய அரசு காப்புரிமை வழங்கியது. இதற்காக நேற்று செந்தில்குமாரை, அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் பாராட்டினார்.
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் அருகே கூட்டுப் புலி என்ற இடத்தில் கோழி லோடு ஏற்றச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் நேற்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழங்கியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பனம்பட்டி மலையராமபுரத்தை சேர்ந்தவர் காளி ராஜா (24) கட்டிட தொழிலாளி ஆன இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதாக சென்றவர் பாவூர்சத்திரம் ரயில் நிலைய பயணிகள் நிழற்குடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி அருகே இசலி கிராம நிர்வாக அலுவலர் குணசுந்தரி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ள மதுபான கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதித்ததில் அதில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக 300 மூடைகளில் கூழாங்கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இது குறித்து நரிக்குடி போலீசார் லாரியை பறிமுதல் செய்து இருவர் மீது நேற்று ஏப்ரல் 24 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் விஜயகுமார் (19).டூவீலர் மெக்கானிக் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற மகேந்திரா பிக்அப் வேன் தாறுமாறாக சென்று திடீரென்று பிரேக் போட்டதால் விஜயகுமார் ஓட்டி சென்ற பைக் மீது வேன் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.விருதை இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
திருச்சியில், நேற்று 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் தவியாய் தவித்தனர். மேலும் சாலைகளில் செல்வோர், குடை பிடித்த படியும் துணிகளால் முகத்தை மூடிய படியும் சென்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர் .திருச்சி மாநகரின் சாலைகளில் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் வந்தனர்.
எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (45). ஓட்டல் நடத்தி வந்தார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்,ரவி அதிகளவில் கடன் வாங்கி, ஓட்டலை நடத்தி வந்துள்ளார்.கடனை திரும்ப கட்ட முடியாமல், சிரமப்பட்டு வந்துள்ளார்.மனவேதனையடைந்த ரவி,நேற்று முன்தினம் இரவு, தற்கொலை செய்து கொண்டார்.நேற்று காலை, அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். நேற்று எருமப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.
தமிழகம் முழுவதும் சித்திரை திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழாவும் நடந்து முடிந்தது. குறிப்பாக மதுரையில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி உள்ளார். இந்த விழாக்களால் ராமநாதபுரத்தில் கடந்த சில வாரங்களாக மல்லிகைபூ , பிச்சிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களும் பல மடங்கு விலை அதிகமாக இருந்தது. தற்போது விழாக்கள் முடிந்த நிலை யில் ராமநாதபுரத்தில் அனைத்து பூக்களின் விலையும் வெகுவாக குறைந்தது.
Sorry, no posts matched your criteria.