India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, தேனி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வெ.கி.ச.இளங்கோவன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில், திமுக சார்பில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட செல்வம்(காஞ்சிபுரம்), டி.ஆர்.பாலு(ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோர் வெற்றி பெற்று எம்பியாகினர். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, திருவண்ணமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை(திருவண்ணமலை), விஷ்னு பிரசாத்(ஆரணி) ஆகியோர் வெற்றி பெற்று எம்பியாகினர். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 மக்களவை தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக கௌதம் சிகாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி(வட சென்னை), தமிழச்சி தங்கபாண்டியன்(தென் சென்னை), தயாநிதி மாறன்(மத்திய சென்னை) ஆகியோர் வெற்றி பெற்று எம்பியாகினர்.
2024 மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக போட்டியிடவுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் மீண்டும் திமுகவே களமிறங்கவுள்ளது. இந்த முறையும் தூத்துக்குடியில் கனிமொழியே போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த தனராசு பதவி உயர்வு பெற்று ஏடிஎஸ்பி ஆக நாமக்கல் மதுவிலக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த எஸ். ஆனந்தராஜ் நாமக்கல் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார். நாமக்கல்லில் 1946 முதல் இதுவரை 59 பேர் டிஎஸ்பியாக பணியாற்றிய வந்தனர். இந்நிலையில் 60 வது டிஎஸ்பியாக ஆனந்தராஜ் பொறுப்பேற்றுள்ளார்.
வடகாடு அருகே வாணக்கன்காடு முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல்விழா நேற்று நடைபெற்றது. விழாவில் போலீசார் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டதாக, கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன், ராஜேஷ், ராம்குமார்,அஜித், ஷீதரன் , வீரையா,குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜ் ஆகிய 10 பேர் மீது வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தென்காசி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக சார்பில் தனுஷ் குமார் வெற்றி பெற்ற எம்பியானார்.மீண்டும் தனுஷ் குமார் தென்காசி வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா அல்லது திமுக வேறு யாருக்காவது வாய்ப்பளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக ஜோதிமணி போட்டியிடு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.