Tamilnadu

News March 18, 2024

திருச்சியில் ரூ.6 லட்சம் பறிமுதல்

image

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி அரியமங்கலம் அடுத்துள்ள சஞ்சீவி நகர் ஓயாமரி சாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கும்பகோணத்திலிருந்து வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதிலிருந்து ரூ.4 லட்சம் கணக்கில் வராத தொகையை பறிமுதல் செய்தனர். இன்று காலையில் மட்டும் இதுவரை ரூ.6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

News March 18, 2024

புதுவை விசாரணை அதிமுக வலியுறுத்தல்

image

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பாஜக. காங்கிரஸ் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கோடிக்கணக்கான பணம் கையூட்டு பெறப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மாநிலத்தில் இரிடியம் கடத்தப்படுவதாக கூறியுள்ளார். இது பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

News March 18, 2024

செங்கல்பட்டு: கல்பாக்கம் – பெங்களூரு பேருந்து சேவை

image

பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து பயணியரின் கோரிக்கைக்கு ஏற்ப, சாந்திநகரில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு, தமிழக அரசு பஸ் சேவை துவங்கி உள்ளது.பெங்களூரில் இருந்து தினமும் இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:00 மணிக்கும், கல்பாக்கத்தில் இருந்து தினமும் இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு பஸ், மறுநாள் காலை 5:30 மணிக்கு, பெங்களூரு வந்தடைகிறது.

News March 18, 2024

ராமநாதபுரம்: தீவிர வாகன சோதனை…

image

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தலும், ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டை அடுத்து தேர்தல் நடத்தைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

News March 18, 2024

வந்தவாசி அருகே விவசாயி தற்கொலை

image

வந்தவாசி அடுத்த சிங்கப்பள்ளி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலன் விவசாயி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் பாலன் வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்தார். அவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலன் இறப்பு குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 18, 2024

கடலூரில் கட்சி கொடி அகற்றினர்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கடலூரில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி கம்பம் இருந்து வந்தன.இதனை அவர்களாகவே எடுத்து கொள்ளும்படி கலெக்டர் அருண் தம்புராஜ் வலியுறுத்தினார். இதனை மீறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் அதனை அகற்றி விடும் என்று கூறினார் இந்த நிலையில் கடலூர் பாரதி சாலையில் உள்ள கொடிக்கம்பங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

News March 18, 2024

சேலத்தில் களமிறங்கும் திமுக!

image

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில், திமுக சார்பில் சேலம் நாடாளுமன்ற தேர்தலில் யார் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

News March 18, 2024

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விபத்து

image

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று (18.03.2024) திண்டுக்கல் – தாராபுரம் செல்லும் தனியார் பேருந்து வெளிய சென்ற போது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் சேதமானது. இதையடுத்து அருகே இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தை மீட்டனர். இந்த விபத்தில் காயமின்றி இருசக்கர வாகன ஓட்டுநர் உயிர் தப்பினார்.

News March 18, 2024

விருதுநகர்: விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் மீது வழக்கு

image

தூத்துக்குடி, புதூரை சேர்ந்தவர் நாகவள்ளி(47). நாகவள்ளி தனது மகனுடன் பைக்கில் குலதெய்வம் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தொட்டியாங்குளம் விஷ்வாஸ் பள்ளி அருகே அவ்வழியாக வந்த மற்றொரு பைக் மோதி நாகவள்ளி & அவரது மகன் இருவரும் படுகாயம் அடைந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் மீது திருச்சுழி போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.

News March 18, 2024

திருச்சியில் ஆலோசனைக் கூட்டம்

image

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் தலைமையில், தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூத் கமிட்டியை வலுப்படுத்துவது, பிரச்சார வியூகங்களை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

error: Content is protected !!