Tamilnadu

News April 25, 2024

தஞ்சை அருகே போலீஸ்காரர் தற்கொலை

image

தஞ்சை அருகே உள்ள வெள்ளாம்பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி (43). இவர் மருவூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். மாமியாரின் மருத்துவ செலவிற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார்.  கடனை திருப்பி செலுத்த முடியாமல் (விஷம்) சாப்பிட்டார். தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று (ஏப்,24) இறந்தார். இது பற்றி போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர். 

News April 25, 2024

படப்பை அருகே சட்ட கல்லூரி மாணவி தற்கொலை

image

படப்பை அருகே செரப்பனஞ்சேரி பகுதியில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகள் மீனா வ/17. இவர் புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மீனா வீட்டின் உள் அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவியின் தற்கொலை குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

நாகையில் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

நாகை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவை புரிந்த 15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார். ரூ.1 லட்சம், பாராட்டு பத்திரம், பதக்கம் கொண்ட விருதினை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் சென்று மே.15க்குள் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

தென்காசி கலெக்டர் முக்கிய வேண்டுகோள்

image

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் விடுத்துள்ள அறிக்கையில் தென்காசி மாவட்டத்தில் தற்போது கடுமையாக வெப்பம் மற்றும் வெப்ப அலை இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். மதியம் 11 மணி முதல் மூன்று முப்பது மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது.

News April 25, 2024

உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.1.44 கோடி

image

தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்டதாக மொத்தம் 379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 317 வழக்குகள் உரிய ஆவணங்கள் சமர்பித்ததால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 62 வழக்குகளில் ரூ.1,44,82,819 பணம் உரிமை கோரப்படாமல் கருவூலத்தில் உள்ளது.

News April 25, 2024

மாவட்ட எஸ்பி வழங்கிய முக்கிய அறிவுரை

image

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (25.04.2024) மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முழுவதும் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

News April 25, 2024

4 டாஸ்மாக் கடைகள் நாளை வரை மூடல்

image

கேரளாவில் நாளை (ஏப்.26) மக்களவைத் தேர்தல் நடைப் பெறுகிறது. இதையொட்டி, தமிழக எல்லையான, நம்பியார், குன்னூர், தாளூர், அய்யன் கொல்லி, எருமாடு ஆகிய இடங்களில் உள்ள 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. நாளை மறுநாள் (ஏப். 27) கடைகள் திறக்கப்படும். இதனால் மது பிரியர்கள் கோரஞ்சால், குந்தலாடி ஆகிய இடங்களில் உள்ள கடைகளை நாடி செல்கின்றனர்.

News April 25, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மஞ்சள் அலர்ட்

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வெப்ப அலை வீசி வருவதால் (மஞ்சள்)அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் அதிக நீர்ச்சத்துள்ள பழவகைகள் உண்ண வேண்டும் இன்று நாமக்கல் மாவட்டம் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News April 25, 2024

தஞ்சையில் 2 நாட்கள் நம்மாழ்வார் திருவிழா

image

தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நம்மாழ்வார் திருவிழா வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில், பாரம்பரிய உணவுப் பொருள்கள் கொண்ட கண்காட்சியும் இடம்பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

News April 25, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன் , சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி , நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!