Tamilnadu

News April 26, 2024

ராசிபுரத்தில் நீர், மோர் வழங்கல்

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சித்திரை தேர் விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்ட நிகழ்வில் கடும் வெயிலிலும் பக்தியுடன் பங்கேற்ற அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ராசிபுரம் பெரிய பள்ளிவாசல் ஜாமியா மஸ்ஜித் சார்பில் நீர் மோர் வழங்கினர். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன்தான் இருக்கிறோம் என்ற மனிதநேயம் காணப்பட்டது.

News April 26, 2024

வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.    கூட்டத்திற்கு தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுலைமான், பொருளாளர் பாக்யராஜ் முன்னிலை வகித்தனர். செயலாளர் நவாஸ்கான் வரவேற்றார். கடையம், பொட்டல்புதூர் நகருக்குள், கனிமவள வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும், சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News April 26, 2024

தெப்பத் திருவிழா – ஆய்வு செய்த எஸ். பி

image

மன்னார்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியை நேற்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, மக்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது மன்னார்குடி டி எஸ் பி உடனிருந்தார்.

News April 26, 2024

“அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல்”

image

திருவாரூா் பனகல் சாலையில் அமைந்துள்ள அதிமுக கட்சியின் நகர அலுவலகத்தில் பொதுமக்களுக்காக நீா் மோா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ், நீா் மோா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோா், பானகம், இளநீா், தா்ப்பூசணி , வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

News April 26, 2024

புதுவை நாகமுத்து மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம்

image

புதுவையில் உள்ள கோவில்களில், சித்ரா பவுர்ணமியையொட்டி பல்வேறு வழிபாடுகள் நடந்தன. குறிப்பாக, அம்மன் கோவில்களில், பால் அபிேஷகம் சிறப்பான முறையில் நடந்தது. இதையொட்டி, சாரம், நாகமுத்து மாரியம்மன் கோவிலில், 108 பால் குடத்துடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டன

News April 26, 2024

15 வயது சிறுமி கர்ப்பம் – சிறுவன் உட்பட இருவர் போக்சோவில் கைது.

image

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுவன், கூலி தொழிலாளி லோகேஷ் உள்ளிட்ட இருவரும் தகாத முறையில் நடந்துள்ளனர். இதனால் சிறுமி ஐந்து மாத கர்ப்பமானார். சிகிச்சைக்காக இன்று மேட்டுப்பாளையம் ஜிஎச் சென்ற போது இதுகுறித்து தெரிய வந்தது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

News April 26, 2024

குளச்சல்: பெண்ணை தாக்கியதாக 5 பேர் மீது வழக்கு

image

குளச்சல் கொட்டில்பாடு கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெர்லின் ராணி(38). இவர் புனித அலெக்ஸ் ஆலயத்தில் செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த அருள்சீலி பொருளாளராக உள்ளார். ஜெர்லின் ராணி இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அருள்சீலியுடன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்.25) ஜெர்லினை, அருள்சீலி உட்பட 5 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக குளச்சல் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 26, 2024

நெல்லை மாணவன் சாதனை

image

வண்ணாரப்பேட்டை ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் சென்டரில் பயிலும் மாணவன் ஸ்ரீராம் இந்த வருடம் நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 65-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளான். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவனை ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் முதன்மை கல்வி மற்றும் வணிக தலைவர் தீரஜ் மிஸ்ரா நேற்று (ஏப்.25)பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

News April 26, 2024

ஆன்லைன் கேமிங் செயலி மோசடி: பரபரப்பு புகார்

image

விளையாட்டு தொடர்பான ஆஃப்களில் பிரபலமான DREAM -11 ஆஃப் பயனாளிகளை ஏமாற்றி மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. DREAM 11 ஆப்பில் ஒரே பெயர்களுடைய ஏராளமான நபர்கள், போட்டிகளில் கலந்துகொள்வது போல சாப்ட்வேர் மூலமாக முறைகேடாக விளையாடி, பொது மக்களின் பணத்தை ஏமாற்றி வருவதாக, விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த கல்யாணகுமார், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

News April 26, 2024

இரு சக்கர வாகனம் பயன் படுத்துங்கள்..

image

நீலகிரி, மே 1ல் கோடை விழா தொடங்குவதை அடுத்து சுற்றுலா கூட்டம் கூடுதலாகும். இதை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை சீராக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று (ஏப். 25) நடந்தது. இதில் கடை நடத்தும் வியாபாரிகள் 4 சக்கரங்களுக்கு பதிலாக 2 சக்கர வாகனத்தை பயன் படும் படி அறிவுறுத்தப் பட்டது.

error: Content is protected !!