India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனியில் மாதந்தோறும் ஒரு முறையும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஒரு மாதம் ரோப் கார் சேவை நிறுத்தப்படும். இந்நிலையில், ரோப்கார் சேவை ஏப்.29ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு தகுந்தார்போல் பக்தர்கள் தங்களது வின்ச் படிப்பாதை அகிய பயணத்திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர் இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 14.54 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 75.74 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்-27) மாவட்டத்தில் அதிகபட்சமாக 107.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் இன்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் சென்னை மார்க்கம் மற்றும் திருச்சி மார்க்கம் செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிகிறது. கோடை முன்பதிவு இல்லாமல் பயணிப்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. எனவே கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 102. 2 டிகிரி பாரன்ஹீட், 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
காரையூர், விளாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(6) நேற்று மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பாம்பு கடித்ததில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு அருகிலிருந்தவர்கள் புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாதேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து காரையூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில். நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது ஆலோசனை கூட்டத்தில். நடைபெற்று மனிதன் நாடாளுமன்ற தேர்தல். காலங்களில் சிறப்பாக பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடத்தப்படவுள்ளது. தடகளம், கால்பந்து, கோ-கோ, கூடைப்பந்து, ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை 29.04.2024 முதல் 13.05.2024 வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் நாகல் நகர், பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம். இந்த ஆலயத்தில் பக்தர்கள் அமர்ந்து சாப்பிட அன்னதான கூடம் கட்டிமுடிக்கப்பட்டது. இதில் வருகின்ற மே மாதம் 1ம் தேதி புதன் கிழமை முதல் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அன்னதானம் நடைபெற உள்ளது என்று கோயில் நிர்வாகி முருகன் தெரிவித்துள்ளார்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோன்று திருப்பத்தூர் ரயில் நிலையம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரயில் பயணிகள் பெரியோர் முதல் சிறியவர்கள் வரை எளிமையாக பிளாட்பாரங்களை கடக்க லிப்ட் வசதியும் எஸ்கலேட்டர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.