India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உதகை காந்தல் அருள்மிகு மூவுலகரசி அம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் நேற்று ( 27 தேதி ) மலையாள சமூகத்தார் சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . அதை தொடர்ந்து இரவு 8 மணியளவில் மூவுலகரசி அம்மன் அலங்காரத்தில் திரு உலா நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கடைவீதி வழியாக முக்கோணம் சென்று மீண்டும் இரவு 10 மணியளவில் கோயிலை வந்தடைந்தது.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு
மனநல மருத்துவ சங்கத்தின் சார்பில் நேற்று தொடங்கிய 2 நாள் மனநல மருத்துவ கருத்தரங்கிற்கு மாநிலத்தலைவர் டாக்டர் சி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கருத்தரங்க மலரை மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா வெளியிட்டார். இதில் மூத்த மருத்துவர்கள் ராமசுப்பிரமணியன், ஜெயந்தினி , விஜய்சுவாமிநாதன் , அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் மலையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கில் மருதிப்பட்டியை சேர்ந்த சந்திரன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிவகங்கை எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் ஒப்புதலின் அடிப்படையில், இராமநாதபுரம் மாவட்ட சிறையிலிருந்த சந்திரனை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றதாக எஸ்பி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட தமுமுக மருத்துவ அணி செயலாளர் சங்கர். இவரிடம் கோவை காளிமேடு மணிகண்டன் என்பவர் ஆம்புலன்சுக்கு அவசர சிகிச்சை கருவிகள் பொருத்தித்தருவதாக ரூ.3.50 லட்சம் பணம் பெற்று ஆம்புலன்சை எடுத்து சென்றுள்ளார். இது வரை அவசர சிகிச்சை உபகரணங்கள் பொருத்தித்தரவில்லை . ஆம்புலன்சை திருப்பியும் தரவில்லை என கூறப்படுகிறது. சங்கர் புகாரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் பேசிய ராஜவேல் என்பவர் நீங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூ.10 கோடி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் வீடியோ காலில் பேசிய ராஜவேல் என்பவருக்கு ரூ.4.88 லட்சம் பணமாக கொடுத்து ஏமாந்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் ராஜவேலை கைது செய்தனர்.
தி.மலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுரைப்படி காந்தி சிலை முன்பு கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்க கரும்பு ஜூஸ் மற்றும் நீர்மோர் ஆகியவற்றை மாவட்ட பிரதிநிதி இல.குணசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சு. ராஜாங்கம், நகர மன்ற உறுப்பினர் மண்டி ஆ. பிரகாஷ் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் வழங்கினர்.
சென்னை – மங்களூர் வரை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ஜோலார்பேட்டை வழியாக நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டது. அப்போது வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையம் அருகே சென்ற போது ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கிடைக்காததால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அச்சிறுமியின் சித்தப்பா முருகவேல் மற்றும் சிறுமியின் அம்மாவின் 2-வது கணவர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாயார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் இருவரையும் போக்சோ வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சியில் 5000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த நிரந்தர அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது வெப்ப அலை வீச்சு காரணமாக, 110 டிகிரி முதல் 115 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வாட்டி வதை பதை பார்த்து வருகிறோம். எனவே வேலை நேரத்தை மாற்றி தருமாறு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க தலைவர் சுப்பிரமணி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கோட்டார் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் தெரிவித்ததாவது: நாகர்கோவில் பால்பண்ணை முதல் கலெக்டர் அலுவலக ரவுண்டானா வரை சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணி நாளை முதல் 30 நாட்கள் நடப்பதால், பார்வதிபுரம் சந்திப்பிலிருந்து பால்பண்ணை, டெரிக், கலெக்டர் ஆபீஸ் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையாக பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம் வழியாக செல்ல வேண்டும்
Sorry, no posts matched your criteria.