Tamilnadu

News March 19, 2024

வேலூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

image

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி வடக்கு பகுதி 19 வட்டம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (மார்ச் 18) நடந்தது. இந்த கூட்டத்திற்கு பகுதி செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பேசினார். மேலும் கழக செயற்குழு உறுப்பினர் ஏழுமலை முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

News March 19, 2024

வந்தவாசி: அனுமந்த வாகனத்தில் சுவாமி திருவீதி உலா

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று(மார்ச்.18) அனுமந்த வாகனத்தில் அருள்மிகு ஶ்ரீ ரங்கநாத பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்தனர்.

News March 19, 2024

கள்ளக்குறிச்சி:  பாதுகாப்பு அறை ஆய்வு

image

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல முன்னேற்பாடாக EVM வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் பொருட்டு அதனை வைப்பதற்கு சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி கீதா, தனி வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்

News March 19, 2024

நெல்லை: ராமர் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளல்

image

பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (மார்ச் 18) 3ஆம் திருநாள் விழாவை முன்னிட்டு இரவு ஸ்ரீராமர் அலங்காரத்துடன் அனுமன் வாகனத்தில் ராஜகோபால சுவாமி பெருமாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

News March 19, 2024

ராம்நாடு: விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்

image

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா தலைமையில் சுவர் விளம்பரங்கள் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

News March 18, 2024

ஆம்பூர் அருகே ராணுவ வீரர்கள் வாகனம் விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா செங்கிலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் 2 மணிக்கு ராணுவ வீரர்கள் வந்த வாகனம் விபத்து ஏற்பட்டது. இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் பல ராணுவ வீரர்களுக்கு காயமடைந்துள்ளனர்.

News March 18, 2024

குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி

image

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று (மார்ச்.18) இந்திய நாட்டின் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினர். இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்த்து மோடி ரோடு ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

News March 18, 2024

சிவகங்கை ஆட்சித்தலைவர் ஆலோசனை

image

சிவகங்கை மாவட்டம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அச்சகங்களின் உரிமையாளர்கள், நகை அடகு கடை நடத்துபவர்கள் மற்றும் திருமண மண்டபங்களில் உரிமையாளர்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் ஆகியோர்கள் அனைவரும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு வியாபாரம், தொழில் போன்றவற்றை முறையாக செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

News March 18, 2024

கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு

image

தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் பெரும் வகையில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேர்தல் தொடர்பாக பதிவான புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

News March 18, 2024

திருச்சி கோர்ட் அதிரடி உத்தரவு.!

image

திருச்சியில் கடந்த 7.9.2020ம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஜான் மேக்சிங் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணையில், எதிரிக்கு 20 வருட சிறை தண்டனையும்,ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து திருச்சி மகிலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவலர்களை திருச்சி கமிஷனர் பாராட்டி உள்ளார்.

error: Content is protected !!