India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி நேற்று (ஏப்.27) நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவரின் பெயரில் முகநூல் பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் கணக்கு துவங்கி பொதுமக்களிடம் உரையாடல் நடத்தி பணம் பறிப்பதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்களுக்கு வைகை ஆற்றில் உள்ள உறை கிணறுகள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக ஆறுகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நேற்று நீலகிரி ஸ்டார்ங் ரூம் (strong room) கேமரா திரை 20 நிமிடம் நின்று விட்டது. தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள். இவ்வாறு தொழில்நுட்ப கோளாறுகள் வராமல் பார்த்து கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பணி. எந்த காரணம் சொல்லாமல் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றார்.
சிவகாசியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் உடலுக்கு நன்கு குளிர்ச்சி தரும் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படும் ஒரு நுங்கின் விலை 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் நுங்கு வாங்கி உண்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் ராஜாஜி மார்க்கெட் எதிரில் இன்று (28/4/24) தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மோர், தன்னீர் பழம், வெள்ளரிப்பழம், இளநீர் ஆகியவற்றை கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
பழவேற்காடு, கடற்கரை பகுதியில் ஆழ்கடலில் வசிக்கும் ஆமை வகைகளில் ஒன்றான ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் – மார்ச் மாதம் வரை கடற்கரைக்கு வந்து முட்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனிடையே பழவேற்காடு வனத்துறையினர் கடந்த டிசம்பர் முதல் மார்ச் 15-ந் தேதி வரை 11,786 முட்டைகளை சேகரித்து பாதுகாத்தனர். அதில் குஞ்சு பொறித்த 9,418 ஆமைகளை நேற்று மாலை கடற்கரையில் விடுவித்தனர்.
வேலூர் மாவட்டம் , ஏரியூர் பகுதியில் கோடை வெயிலை சமாளிக்க மற்றும் பொதுமக்களின் தாகம் தீர்க்க சுமார் 500 பேருக்கு சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் சார்பாக இன்று மதியம் மோர் வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
சமயபுரம் ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியின் இன்ஸ்டிடியூட் இன்னோவேஷன் கவுன்சில் மற்றும் உலக அறிவுசார் சொத்து தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நேற்று நடந்தது. கருத்தரங்கை நிர்வாக இயக்குனர் குப்புசாமி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் தேவராசு சீனிவாசன் வரவேற்றார். முதன்மை விருந்தினராக ஐ இ டி எஸ் இயக்குனர் தமிழ்செல்வன் பங்கேற்று, நிதி திட்டங்கள் பற்றிய நின்றவர்கள் வழங்கினார்.
கடலூர் ஹாக்கி அகாடமி நடத்தும் இலவச கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வரும் 29 ஆம் தேதி துவங்க உள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெறுபவர்களுக்கு காலை மற்றும் மாலையில் சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9444832122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி நகர திமுக சார்பில் 23,25 வார்டு சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து திறந்து வைத்து நீர், மோர் மற்றும் தண்ணீர், பழம் வழங்கினார் தென்காசி நகர் மன்ற தலைவர், தென்காசி நகர கழக செயலாளர் சாதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.