India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை, பேரையூர் அருகே அத்திப்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் புதுமாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் அத்திப்பட்டி, வடகரை, மங்கல்ரேவு
மற்றும் சின்னக்கட்டளை ஆகிய 4 பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று முதல் 30ம் தேதி வரை 3 நாட்களுக்கு மூடுவதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்திரவிட்டுள்ளார். இதையடுத்து இன்று முதல் டாஸ்மாக் மூடப்பட்டது.
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்களை மே மாதம் 4 வது வாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தங்களது வாகனங்களை தயார் செய்து ஆய்வு நாளன்று ஆய்வுக்கு உட்படுத்தி உரிய சான்று பெற்று இயக்க வேண்டும் என நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் வினோத் என்பவர் வாகன விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் மாலை அணிவித்து தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.
ராகினிப்பட்டியைச் சேர்ந்த விஜயலட்சுமி (19) தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் உள்ள கல்லூரிக்குப் போவதாக கூறிச் சென்று சென்றவர் எங்கு சென்றார் தெரியவில்லை என அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் இன்று சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுவை அரசு கல்வித்துறை & விளையாட்டு துறை சார்பில், 17 &19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் புதுவை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், கதிர்காமம் அரசு பள்ளி, புதுவை பல்கலைக்கழகம், அமலோற்பவம் பள்ளி ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.
சுட்டெரிக்கும் வெயிலை தாங்கும் விதமாக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர், மோர் பந்தல் திறக்க அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அந்த வகையில் திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி. வி.சண்முகம் ஐந்து இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல் இன்று பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கப்பட்டது.
சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன்
வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள்
உள்ளிட்ட இம்மையத்தின் அனைத்து பகுதிகளும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனை சேலம் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலகிரி கலெக்டர் அருணா கூறியுள்ளதாவது; அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு சிசிடிவி செயலிழப்பு ஏற்பட்டது. வேறு எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. வாக்கு பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளன. சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்து சென்று காட்ட தயாராக இருக்கிறோம் என்றும் (CCTV) கேமரா செயலிழப்புக்கு விளக்கம் அளித்து உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு பள்ளித் துணை ஆய்வாளர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று இராசிபுரம் சாந்தி இன் கிராண்ட் கோல்டன் காலில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் ஏற்பாட்டில் சிறப்புடன் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக காந்தியவாதி இரமேஷ் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டார்.
ராயக்கோட்டை பகுதியில் மழையின்மையால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் விவசாய சாகுபடியான காய்கறிகள், பூக்கள் மற்றும் கொத்தமல்லி, புதினா போன்றவை பசுமையாக காட்சியளிக்கிறது. தென்னை, மா, பலா போன்ற மரங்களும் நல்ல பலனை கொடுத்து வருகிறது. பலா மரங்களில் பலா காய்கள் கொத்து, கொத்தாக காய்த்துள்ளதால் பாரப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
Sorry, no posts matched your criteria.