Tamilnadu

News August 17, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவரிடம் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தியாகு என்பவர் பாலியல் ரீதியாக துன்பறுத்தி, வெளியே சொல்ல கூடாது என சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். புகாரின் பேரில் தியாகு (24) அவரது மனைவி ரஞ்சிதா (22) அவரது தாய் மற்றும் ஜெயந்தி (45) ஆகியோர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

News August 17, 2025

1.18 லட்சம் யூனிட் மின் உற்பத்தி கூடங்குளம் சாதனை

image

கூடன்குளம் 2 அணு உலைகள் மூலம் இதுவரை 1.18 லட்சம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது” என அணு மின் நிலைய இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1வது அணு உலை மூலம் 65,985 மில்லியன் யூனிட்களும், 2வது அணு உலை மூலம் 52,211 மில்லியன் யூனிட்களும் உற்பத்தி செய்யப்பட்டு, 1வது அணு உலை 300 நாட்களும், 2வது அணு உலை 400 நாட்களுக்கு மேலாக இயங்கி வருகிறது.

News August 17, 2025

வாசுதேவநல்லூர் பகுதிகளில் ஆகஸ்ட்.19 மின்தடை

image

வாசுதேவநல்லூர் பகுதிகளில் ஆகஸ்ட் 19ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2 மணி வரைதரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல் கட்டும் சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானை கோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் பகுதிகளில் மின்தடை பணிகள் முடிந்த பின்பு சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 17, 2025

கராத்தே கற்றுத்தர கோவை கலெக்டர் அழைப்பு

image

கோவையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு கராத்தே தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்சம் இரு ஆண்டுகள் கராத்தே பயிற்சி வழங்கியஅனுபவமுள்ள நபர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆக.22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News August 17, 2025

நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (17-08-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ. 95-க்கும், முட்டை கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.97-ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ.4.90- ஆகவும் நீடித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

News August 17, 2025

கோவை மாநகரில் இருந்து 155 ரவுடிகள் வெளியேற உத்தரவு

image

கோவையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்காணித்து அவர்களை சென்னை நகர போலீஸ் சட்டப்பிரிவு 51ன் கீழ் நகரை விட்டு 6 மாதத்திற்கு வெளியேற உத்தரவிடப்பட்டு வருகிறது. மேலும், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சாட்சி சொல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். சாட்சிகளை இவர்கள் மிரட்டி வருகின்றனர். அதன்படி கோவை நகரில் இருந்து இதுவரை 155 ரவுடிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 17, 2025

BRAKING: நீலகிரியில் டைடல் பூங்கா 1000 பேருக்கு வேலை!

image

நீலகிரியில் நியோ டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. குன்னூர், எடப்பள்ளிக்கு அருகே 8 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பூங்கா அமைய உள்ளது. சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த நியோ டைடல் பூங்கா, சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மகிழ்சியான செய்தியை அணைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News August 17, 2025

தூத்துக்குடியில் டீ, காபி விலை திடீர் உயர்வு

image

தூத்துக்குடியில் சாலை ஓரங்களில் உள்ள டீக்கடைகளில் பெரும்பாலாக டீ, காபி மட்டும் விற்பனை செய்யப்படும் கடைகளில் கடந்த சில மாதங்களாக டீ, காபி களின் விலை 12 ரூபாய் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது டீ, காபிகளின் விலை ரூபாய் 3 அதிகரித்து குறைந்தபட்ச 15 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. பால் மற்றும் டீ தூள்களின் விலை ஏற்றம் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

News August 17, 2025

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைமுகம் சாதனை

image

தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலை சூரிய ஒளி மின்சாரத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதம் 16,23,461 யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்து புதிய மைல்களை எட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 15,30,614 யூனிட் மின்சாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 17, 2025

குறைந்த விலையில் மல்பெரி மரக்கன்றுகள் வேண்டுமா?

image

திருப்பூர் விவசாயிகளே பட்டு வளர்ச்சித் துறையின் அரசுப் பண்ணைகளில் மல்பெரி மரக்கன்றுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. உடுமலைப்பேட்டையில் உள்ள “பார்மர்ஸ் டிரைனிங் சென்டர்” – மைவாடி-யில், இருப்பு வைக்கப்பட்டுள்ள 25,000 V1 ரக மல்பெரி கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து மேலும் விவரங்கள் தேவைப்பட்டால், அதிகாரி கண்ணன் அவர்களை 87786 97224 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!