India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.நகர் சாரதி தெருவை சேர்ந்தவர் மாதவன்(67). இவர், பெங்களூரில் வசிக்கும் தனது பேத்தியை பார்க்க கடந்த பிப்.24ஆம் தேதி சென்று அங்கு தங்கியுள்ளார். ஏப்.24ஆம் தேதி சென்னை திரும்பிய நிலையில், வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்புறக் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 15 கிலோ பித்தளை பாத்திரங்கள் திருடு போயிருந்தது தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாளை மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மதுபான கடைகளும் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி நாளை மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட நெசவாளர்கள் இலவச வேட்டி சேலைக்காக கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்க திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் அவர்களிடம் மனு அளித்தனர். மேலும் இந்த நிகழ்வில் பொதட்டூர்பேட்டை பேரூர் செயலாளர் பாபு, பிரதிநிதி சஞ்சய் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ஆணையர் ரவிச்சந்திரன் இன்று மாலைக்குள் 48வது வார்டு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் 2024-2025- க்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை கட்டினால் 5 % ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் ஒரே நேரத்தில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் மிக பிரம்மாண்டமான ஜவுளி சாம்ராஜ்யத்தில் உருவாக்கிய வியாபார சக்ரவர்த்தி திருச்சி சாரதாஸ் உரிமையாளர் மணவாளன் பிள்ளை இன்று மதியம் 2.30 இயற்கை எய்தினார். அன்னாரது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பூதவுடல் அவரது உயிராகக் கருதப்படும் சாரதாஸ் நிறுவனத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சோலார் அருகில் காவிரி ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆற்றில் மூழ்கிய சின்னம்பாளையத்தை சேர்ந்த சிறுவர்கள் தபீஸ், மெளனீஸ் ஆகியோரது உடல்களை மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு, ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே இதற்காக விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பிக்க 01.05.2024 முதல் 15.05.2024 வரை விண்ணபிக்கலாம் என நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.