Tamilnadu

News May 4, 2024

திரௌபதி அம்மன் ஆலய தீமிதி விழா

image

மணவெளி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த தருணம். மேலும் இந்த தீமிதி திருவிழாவில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News May 4, 2024

ஶ்ரீ கருப்பண்ணசாமி கோவில் திருவிழா

image

கரூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட காந்திகிராமத்தை அடுத்த திண்ணப்பா நகரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ கருப்பண்ணசாமி சப்த கன்னிமார்கள் சுவாமி ஆலயத்தின் 12ஆம் ஆண்டு நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி 05 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுவதையொட்டி திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

News May 4, 2024

செங்கல்பட்டு அருகே ஏரியில் கலெக்டர் ஆய்வு

image

கோடைக்காலத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள பல்லாவரம் வட்டம் கீழ்கட்டளை ஏரியில் இன்று மாலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு நீர் இருப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்து விளக்கம் அளித்தனர்.

News May 4, 2024

பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம்

image

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நீடாமங்கலத்தில் பத்மஸ்ரீ ராமன் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜேந்திரன் பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கத்தில் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் மரங்களை நட்டு வளர்க்க தீர்மானிக்கப்பட்டது.

News May 4, 2024

ரயில் மூலம் கோவை வந்த கராத்தே வீரர்கள்

image

மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான கோஜு ரியூ தேசிய அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தில் இருந்து 95 பேர் கலந்து கொண்டு வெற்றிபெற்றனர். அவர்கள் மும்பையில் இருந்து ரயில் மூலம் கோவை ரயில்வே நிலையம் இன்று வந்தடைந்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு இன்று அளிக்கப்பட்டது.

News May 4, 2024

நாகையில் அதிகாரி ஆய்வு

image

நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வகுப்பறை சுவரில் வண்ண ஓவியம் வரையும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் நேற்று ஆய்வு செய்தார். ஓவியங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் பணியின் காலம் மற்றும் தரமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

News May 4, 2024

உளுந்தூர்பேட்டையில் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

image

உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு திருச்சியில் இருந்து விழுப்புரம் வரை பயணத்தை துவங்கியுள்ள பயணியர் ரயிலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பிலும் உளுந்தூர்பேட்டை வளர்ச்சிக்கு குழு சார்பிலும் மலர் தூவி ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் Dyfi மாநில இணை செயலாளர் செல்வராஜ் உளுந்தூர்பேட்டை வளர்ச்சி ஒருங்கிணைப்பாளா் ரமேஷ்பாபு மற்றும் ஹரிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

News May 3, 2024

ஈரோடு : அக்னி வெயில் தொடங்கும் முன் 110.48°

image

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. பின்னர் நேற்று அதிக அளவாக 111.2 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. இந்நிலையில், இன்று 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. நாளை அக்னி வெயில் தொடங்குவதால் மக்கள் மேலும் கவலையடைந்துள்ளனர்.

News May 3, 2024

போலி மருத்துவர்கள் குறித்து தெரிவிக்கலாம்

image

ராணிப்பேட்டை, சத்திரம் புதூர் பகுதியில் போலியாக மருத்துவம் பார்த்த திவ்யா என்ற பெண் இன்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் போலியாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்தால் அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி இன்று தெரிவித்துள்ளார்.

News May 3, 2024

95 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் மையம்

image

நெல்லை சுகாதார ஆய்வாளர் கீதாராணி விடுத்துள்ள செய்தி குறிப்பில், அக்னி நட்சத்திர கத்திரி வெயில் நாளை (மே.4) தொடங்குவதால் பொதுமக்கள் அவ்வப்போது ஓஆர்எஸ் கரைசல் பருக வேண்டும். நெல்லை மாநகராட்சி பகுதியில் 16 இடங்களிலும், ஊராட்சியில் 27 இடங்களிலும் என 43 இடங்களிலும் 42 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 10 மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் என 95 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

error: Content is protected !!