India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளனர்.
புதுவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் 90 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பொது இடத்தில் கலவரம் மற்றும் அமைதியை குலைக்கும் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய காவல் துறை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்ற வழக்கு உள்ளவர்கள் மீது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 107 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து வருகின்றனர்.
கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டக் குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் முத்துச்செல்வன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் பாலா மாநிலக்குழு முடிவுகள் குறித்து பேசினார்கள். இதில் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளரையும், கரூர் காங்கிரஸ் வேட்பாளரையும் பெரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 224 மது பாட்டில்கள் நேற்று(மார்ச் 20) பறிமுதல் செய்யப்பட்டது. வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையம் அருகே சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, புதுச்சேரியிலிருந்து வந்த காரை சோதித்தில், ரூ.62,000 மதிப்புள்ள 224 மதுபாட்டில்களை அனுமதியின்றி எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் முருகன் என்பவருக்குப் பதிலாக மகேஷ் ஆனந்த் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும், தேர்தல் பொறுப்பாளராக இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சல்மானை நியமித்து அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
சீர்காழி விவேகானந்தா கல்வி குழுமத்தின் குட் மாரிட்டன் பள்ளியின் சீனியர் கே.ஜி மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.பள்ளி நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்க,செயலர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் சுகந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்
அதிமுக அரக்கோணம் மக்களவை தொகுதி வேட்பாளராக A.L.விஜயன் அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து நேற்று(மார்ச் 20) ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ராணிப்பேட்டை நகர அதிமுகவினர் நகர செயலாளர் சந்தோஷம் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கிடையே வெறுப்பையும் துவேஷத்தையும் தூண்டுகிற குறிப்புகள் இடம் பெற கூடாது. கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மற்ற கட்சியினரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, பொது நடவடிக்கைகளுக்கு தொடர்பில்லாத விவரங்கள் பற்றியோ ஆட்சேபனையான விவரங்கள் இடம் பெற கூடாது. மீறினால் தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவிப்பு.
பர்கூர் அருகே கப்பல்வாடியில் சீனிவாச பெருமாள், கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜையும், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. நேற்று சீனிவாச பெருமாள், பாலமுருகன், ஓம் சக்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வேதமந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி 14 ஆவது வார்டில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வந்த 9 மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களின் சொந்த செலவில் விமானத்தில் பெங்களூர் அழைத்துச் சென்றனர். இதில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் விமானத்தில் சென்றனர்.
Sorry, no posts matched your criteria.