Tamilnadu

News May 4, 2024

பழனி முழுவதும் குட்கா பொருள் விற்பனை தீவிரம்

image

திண்டுக்கல் மாவட்டம், பழனி- பொள்ளாச்சி பைபாஸ் சாலையில் உள்ள கடைகள் மற்றும் நகரில் பல கடைகளில் குட்கா பொருள், புகையிலை, ஹாண்ட்ஸ் புகையிலை போன்றவற்றை மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சில கடைகளில் குட்கா பொருள்களை பேப்பரில் மறைத்து கொடுத்து விற்பனை செய்கிறார்கள். மேலும், 20 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 50- ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 4, 2024

குடி போதையில் தவறி விழுந்து ஒருவர் பலி

image

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள உண்டார் பட்டியலை சேர்ந்தவர் வேல்முருகன் (45). இவர் மது போதையில் அப்பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலியாகினார். இதுகுறித்து தகவல் அறிந்த
தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 4, 2024

ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற திருச்சி வீரர்

image

இளைஞர் மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் சார்பில் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் வல்லத்தில் நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருச்சி பிளாஸ்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர் சஹான் அகமது முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

News May 4, 2024

புகழ்பெற்ற வேலூர் கோட்டையின் சிறப்புகள்!

image

வேலூர் கோட்டை விஜயநகரப் பேரரசால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். 133 ஏக்கர் பரப்பளவில் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையச் சுற்றி அமைந்துள்ளது. இது பல மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1806 ஆம் ஆண்டு பிரிட்டிஷாருக்கு எதிராக முதன்முதலில் கிளர்ச்சி இக்கோட்டையிலேயே நடைபெற்றது. இக்கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயில், தேவாலயம், பள்ளிவாசல், அரசு அருங்காட்சியகம் உள்ளது.

News May 4, 2024

விழுப்புரம் வீடூர் அணை பற்றிய தகவல்!

image

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே அமைந்துள்ளது இந்த வீடூர் அணை. 1959 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை மறைந்த முதல்வர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இவ்வணையின் மொத்த நீளம் அகலம் முறையே 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும்.

News May 4, 2024

தூத்துக்குடியின் பெருமைமிகு வைகுண்டநாதர் கோயில்

image

தூத்துக்குடியிலுள்ள வைகுண்டநாதர் பெருமாள் கோயில் 6-9 ஆம் நூற்றாண்டுகளில் ஆழவார்களின், இடைக்கால நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் குறிபிடப்பட்டுள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றான இது நவ திருப்பதி கோயில்களிலும், வைணவத்தில் உள்ள நவகிரக கோயிகளிலும் ஒன்றாகும். 110 அடி ராஜ கோபுரம் கொண்ட இதில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சிற்பங்கள் உள்ளன. பல ஆட்சிகளைக் கண்ட இக்கோயிலில் பல புராணக்கதைகளையும் தாங்கியுள்ளது.

News May 4, 2024

தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியில் கணேசன் என்பவரை இன்று அவரது மூத்த மகன் வினோத்குமார் இரும்பு கம்பியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அன்னவாசல் போலீசார் கிணற்றில் பதுங்கியிருந்த வினோத்குமாரை தீயணைப்புதுறையினர் உதவியுடன் கைது செய்தனர்.

News May 4, 2024

பாரதியார் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

image

பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளில் நடத்தப்பட்டு வரும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் 2024-2025- கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது. தகுதியுடைய மாணவர்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பத்தை கல்லூரி இணையத்தளத்தில் 06.05.2024 முதல் 06.06.2024 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் இன்று கூறியுள்ளது.

News May 4, 2024

திருப்பத்தூர்: 768 மாணவர்கள் நீட் தேர்வு

image

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு 768 மாணவர்கள் எழுதுகின்றனர். அவர்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்த நேரத்திற்குள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News May 4, 2024

புகையிலை பொருட்கள் பறிமுதல்

image

வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி திரவுபதி கோயில் முன்பு போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சிவலிங்கபுரத்தை சார்ந்த இசக்கி என்பவர் டூவிலரை நிறுத்தி சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 10 கிலோ புகையிலைப் பொருட்களுடன் டூவிலரை பறிமுதல் செய்த போலீசார் இசக்கியை அதிரடியாக கைது செய்தனர்.

error: Content is protected !!