India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்கி வரும் வணிகப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணிகர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டில் பெருந்தொழிலாக வளர்ந்துவரும் வணிகமும், அதிலும் சில்லரை வணிகமும் நாளுக்குநாள் அதிகரித்து பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது” என எம்எல்ஏ ஜி.கே.மணி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஊட்டி சேரிங்கிராஸ் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெங்களூரூ ஜேகே அகாடமி சார்பில் சிலம்ப போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கேரளா, கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த 800 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் திருப்பூர் திருமுருகாற்றுப்படை போர் சிலம்பம் தற்காப்பு கலைகள் பயிற்சி பள்ளியை சேர்ந்த 10 மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிக்கு இரண்டு வெள்ளி பதக்கம். வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் அப்பகுதி விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம் கிராமத்தில் பாலாற்றங்கரை அருகே உள்ள ஒரு மின்கம்பம் சில ஆண்டுகளுக்கு முன்பு காற்றில் சாய்ந்தது. இன்றுவரை சரிசெய்யப்படாமல் அப்படியே ஆபத்தான முறையில் தொங்குகிறது. விபத்துக்கள் ஏற்படும் முன் மின்சாரத் துறையினர் அகற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோளிங்கரில் உள்ள திருத்தணி சாலையில் குறுகிய வளைவில் கண்டெய்னர் லாரி திரும்பிய போது, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ் உரசியது. இதனால் லாரி டிரைவர் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து லாரி டிரைவர் மீது அரசு பேருந்து ஓட்டுநர் நேற்று(மே 5) போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கடையம் அருகிலுள்ள,முதலியார்பட்டி மெயின்ரோட்டில், பக்கீர் மைதீன் (56) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.அதே ரோட்டில் மஸ்த் செப்பல் என்ற பெயரில் தமீம் அன்சாரி என்பவர் செருப்பு கடை வைத்துள்ளார்.இந்த இரண்டு கடைகளையும் வழக்கம்போல் காலையில் திறக்கும் போது பூட்டு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையின் கல்லாவில் பணம் செல்போன் பல பொருட்கள் திருட்டுப் போய் உள்ளனர்.கடையம் போலீஸ் விசாரிக்கின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ரெத்தினம் பிள்ளை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் செல்வகுமார் (16). இவர் நேற்று கட்டாரிப்பட்டி சாலையில் பாதயாத்திரை ஆக நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னால் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் செல்வகுமார் படுகாயம் அடைந்தார். தோகைமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.
பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, அரசு போக்குவரத்துக் கழக சிஐடியூ சங்கம் சார்பில் நேற்று(மே 5) வாயிற் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் மகேந்திர குமாரை கண்டித்து வரும் 14ம் தேதி மேலாண் இயக்குநர் அலுவலகம் அருகில் நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைப்பெற்றது.
குமரி மாவட்டத்தில் நேற்று(மே 5) ஏற்பட்ட கடல் சீற்றத்தால் தேங்காப்பட்டணம் கடலில் கம்பிளார் பகுதியை சேர்ந்த தந்தையும், குழந்தையும் அலையில் அடித்து செல்லப்பட்டனர். தந்தை மீட்கப்பட்ட நிலையில் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. மீட்பு பணியை ராஜேஷ் குமார் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீட்பு பணியை தீவிரப்படுத்த கேட்டு கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை வெயில் தொடங்கியவுடன் 100 பாரன்ஹீட் வெயில் பதிவாகி சதம் அடித்து வந்த நிலையில் ஏப்ரல் மாதம் முழுவதும் 104 பாரன்ஹீட் அதிகமான வெப்பம் பதிவானது. இந்நிலையில் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி,மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1/2 மணி நேரம் பெய்ய மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. மத்தியில் உள்ள ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும். காவல்துறை அதிகாரி அருண் உடன் மற்ற பெண் காவலர்களை இணைத்து சவுக்கு சங்கர் பேசியதை தவிர்த்திருக்கலாம். சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் போடப்பட்டுள்ளது என்றார்.
Sorry, no posts matched your criteria.