Tamilnadu

News March 21, 2024

தருமபுரி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

2024 மக்களவைத் தேர்தல், தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி போட்டியிடவுள்ளார். இவருக்கு 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றபோது, இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தி.மு.கவின் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார் மணி.

News March 21, 2024

விருதுநகர் அருகே விபத்து; உடல் நசுங்கி மரணம்

image

சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம்.மனைவி ஜோதி (37).நேற்றுமுன்தினம் தந்தை நாகராஜ் உடன் சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் டூவீலரில் தனியார் திரை அரங்கம் வழியாக சென்று கொண்டிருந்தார்.பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது. வாகனம் ஜோதியின் மீது ஏறி இறங்கியது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

News March 21, 2024

பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் மக்களவை தொகுதிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில், பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளராக தஞ்சாவூரை சேர்ந்த தேன்மொழியும், சிதம்பரம் மக்களவை தொகுதி வேட்பாளராக பெரம்பலூரை சேர்ந்த ஜான்சி ராணியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 21, 2024

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழா

image

திருவண்ணாமலை SRGDS மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட இறகு பந்து போட்டி நடைபெற்றது . இதில் தனியார் மற்றும் அரசு பள்ளி சார்ந்த 20 அணிகள் பங்கு பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் சான்று மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார். பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 21, 2024

செங்கல்பட்டு: மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் ரத்து

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் (மார்ச்.22) நாளை நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான முகாம்கள் நாடாளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

போடி அருகேயுள்ள கோணாம்பட்டியைச் சேர்ந்தவா் சுப்புலட்சுமி. இவா் கடந்த 2014 ஆம் ஆண்டு வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். போலீசார் நடத்திய விசாரணையில் நகைக்காக நடராஜன் என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த நிலையில் வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் தீர்ப்பாக நேற்று (மார்.20) நடராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News March 21, 2024

ஈரோடு அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் ரூ.35 லட்சம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் தாவணிகரையை சேர்ந்த ஹரிஷ் என்பதும் கோவையில் இடம் வாங்கிய நபருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

News March 21, 2024

அரியலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

அரியலூர் பெரியகற்கை கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார். நேற்று(மார்ச்.20) ஆண்டிமடம் – விருத்தாச்சலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2024

நாமக்கல்: 100/100 களம் இறங்கிய ஆட்சியர்

image

நாமக்கலில் 19ம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா தலைமையில் மக்களவைத் தேர்தல் 24 முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து தேர்தலில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

News March 21, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

சிவகங்கை மாவட்டம் கமுதி தாலுகா பங்களா புதுக்குடியை சேர்ந்தவர் சூரியா (21).இவரது நண்பர் சதீஷ்கண்ணன் (21).இருவரும் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று இருவரும் மோட்டார்சைக்கிளில் புதுக்கோட்டை நோக்கி பைபாஸ் ரோட்டில் சென்றனர்.புதுக்கோட்டையில் இருந்து வந்த லாரி பைபாஸ் ரோடில் இவர்கள் இருசக்கர வண்டி மோதியதில் சூரியா சம்பவ இடத்திலேயே பலியானார்.

error: Content is protected !!