Tamilnadu

News March 21, 2024

நாமக்கல் தேர்தலுக்கு நவீன மின்னணு வாகனம் தயார்

image

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் 24ல் 100 சதவிகித வாக்குபதிவு நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நவீன மின்னணு வாகனத்தில் தேர்தல் விழிப்புணர்வு பாடல் குறும்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரையிடப்பட உள்ளது.

News March 21, 2024

ஆரணி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

2024 மக்களவைத் தேர்தல், ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணி வேந்தன் போட்டியிடவுள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸிலிருந்து விஷ்ணுபிரசாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை இத்தொகுதியில் திமுக-வே நேரடியாக களம் காண்கிறது. இதில் போட்டியிடும் தரணி வேந்தன், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி ஆகியவை இதன் சட்டமன்றத் தொகுதிகள்.

News March 21, 2024

கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

image

கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் அண்ணா தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் வாசகி சிறப்பு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் என்எல்சி சுரங்க நிறுவனத்தின் 7 சதவீத பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் மாதவன் நன்றி தெரிவித்தார்.

News March 21, 2024

அதிமுக வேட்பாளர் எடப்பாடியிடம் வாழ்த்து

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார் என இன்று (மார்ச் 21) காலை அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 21, 2024

வீட்டின் அருகே மது விற்றவர் கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சீகம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆறுமுகம். இவர் வளையப்பட்டியில் உள்ள ஜீவா என்பவரின் வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மது விற்ற ஆறுமுகம் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

News March 21, 2024

ராஜபாளையம், ஸ்ரீ.புத்தூர் சட்டமன்ற தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

2024 மக்களவைத் தேர்தல், தென்காசி(தனி) தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீ குமார் போட்டியிடவுள்ளார். மயக்கவியல் நிபுணரான இவர் முதன் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். 2002 முதல் திமுக-வில் இணைந்து பணியாற்றி வருகிறார். தென்காசி தொகுதிக்கு வேட்பாளராக, எம்.பி தனுஷ் குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி உட்பட பலர் முயற்சி செய்த நிலையில் இவர் தேர்வாகியுள்ளார்.

News March 21, 2024

தென்காசி(தனி) தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

2024 மக்களவைத் தேர்தல், தென்காசி(தனி) தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீ குமார் போட்டியிடவுள்ளார். மயக்கவியல் நிபுணரான இவர் முதன் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். 2002 முதல் திமுக-வில் இணைந்து பணியாற்றி வருகிறார். தென்காசி தொகுதிக்கு வேட்பாளராக, எம்.பி தனுஷ் குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி உட்பட பலர் முயற்சி செய்த நிலையில் இவர் தேர்வாகியுள்ளார்.

News March 21, 2024

நீலகிரி விவசாய குறைதீர் கூட்டம் ரத்து

image

நீலகிரி விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாதம் ஒரு முறை நடத்தப் பட்டு வருகிறது. இம்மாதம் குறைதீர் கூட்டம் நாளை (மார்ச் 22) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்து உள்ளார்.

News March 21, 2024

தருமபுரி தொகுதி மேட்டூர் சட்டமன்றத்தின் புதிய திமுக வேட்பாளர்

image

2024 மக்களவைத் தேர்தல், தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி போட்டியிடவுள்ளார். இவருக்கு 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றபோது, இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மேட்டூர் சட்டமன்ற தொகுதி தருமபுரி மக்களவைத் தொகுதியில் அடங்கும்.

News March 21, 2024

ஐபிஎல் போட்டிக்காக சிறப்பு ரயில் இயக்கம்

image

சென்னையில், ஐபிஎல் போட்டி நடைபெறும் மார்ச் 22(நாளை) மற்றும் 26ம் தேதிகளில் வேளச்சேரி – சிந்தாதிரிபேட்டை வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஐபிஎல் டி-20 தொடரின் 17வது சீசன் நாளை(மார்ச் 22) சென்னையில் தொடங்குகிறது. இதையடுத்து சென்னை அணியின் போட்டியை காண ரசிகர்கள் அதிகளவில் வருவர் என்பதால், போக்குவரத்துக்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

error: Content is protected !!