India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி சார்பில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (21.03.2024) 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர் பாண்டியன் அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நாகர்கோவில் அருகே அமைந்துள்ள பறக்கை ஸ்ரீதேவி பூதேவி சமேத மதுசூதன பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா மார்ச்-15 தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பூஜையில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். உடன் மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் (திருப்பெரும்புதூர்) சந்தோஷ் சரண் (காஞ்சிபுரம்) மதுக்கர் ஆவேஸ் , மற்றும் வருமான வரி நோடல் அலுவலர் (காஞ்சிபுரம்) பாலமுரளிதரன் ஆகியோர் தலைமையில் செலவின கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
ஈரோடு அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
மனுவில், “நிலைகட்டணம் திரும்பபெற வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்த உள்ள மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். சோலாருக்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.
திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா 2024 இன்று நடைபெற்றது. இதில் கேர் கல்வி குழுமத் முதன்மை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சுகுமார் துரைசாமி ஆண்டறிக்கை வாசித்தார். நேச்சுரல்ஸ் சலூன் & ஸ்பா நிறுவனத் தலைவர் குமாரவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை இன்று திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர் கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல்(மே) மாவட்ட கழக செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி ஆகியோர் அறிமுகம் செய்து திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினர்.
தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மார்ச் 21) விடுத்துள்ள அறிவிப்பில், நெல்லை தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளை (மார்ச் 22) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். உவரி, குலசேகரப்பட்டினம், பெரியதாழை ஆகிய இடங்களில் நாளை அதிகாலை கன மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளராக அதிமுகவை சேர்ந்த சந்திரமோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அதிமுக கட்சித் தொண்டர்கள் உற்சாகத்தில் கொண்டாட்டம். வருகின்ற 24ம் தேதி திருச்சியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறும் எனவும் தகவல்.
மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் இன்று மதுரை மாவட்ட கழக செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான செல்லூர் கே.ராஜூ மற்றும் R.B.உதயகுமார் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது இருவரும் வேட்பாளர் சரவணன் வாழ்த்தியதுடன் தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொள்வது குறித்து உறுதி அளித்தனர்.
2024 மக்களவைத் தேர்தல், ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணி வேந்தன் போட்டியிடவுள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸிலிருந்து விஷ்ணுபிரசாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை இத்தொகுதியில் திமுக-வே நேரடியாக களம் காண்கிறது. இதில் போட்டியிடும் தரணி வேந்தன், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். செஞ்சி மற்றும் மயிலம், ஆரணியின் விழுப்புர மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்.
Sorry, no posts matched your criteria.