Tamilnadu

News May 7, 2024

கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று(மே 7) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் பாரபட்சமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து மக்களை சிறிது இளைப்பாற வைக்கிறது. அதன்படி இன்று கிருஷ்ணகிரி உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 7, 2024

ராணிப்பேட்டை: இன்று கனமழைக்கு வாய்ப்பு!

image

சேலம் மாவட்டத்தில் இன்று(மே 7) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் பாரபட்சமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து மக்களை சிறிது இளைப்பாற வைக்கிறது. அதன்படி இன்று சேலம் உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

தருமபுரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று(மே 7) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் பாரபட்சமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து மக்களை சிறிது இளைப்பாற வைக்கிறது. அதன்படி இன்று தருமபுரி உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

அரியலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

image

தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை விசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அரியலூர் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

சேலம் மாவட்டத்தில் இன்று(மே 7) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் பாரபட்சமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து மக்களை சிறிது இளைப்பாற வைக்கிறது. அதன்படி இன்று சேலம் உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

மாணவிகளுக்கு படகு இயக்க பயிற்சி

image

புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து காரைக்கால் வரை தேசிய மாணவர் படையை (என்.சி.சி.) சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் சாகச பயணம் மேற்கொள்கின்றனர். இந்த சாகச பயணம் அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி லெப்டினன்ட் கமாண்டர் லோகேஷ் தலைமையில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் படகை இயக்குவது குறித்து அவர்களுக்கு என்.சி.சி. அலுவலர்கள் நேற்று பயிற்சி அளித்தனர்.

News May 7, 2024

குமரி: விபத்தில் சிக்கிய இருவர் உயிரிழப்பு!

image

குமரி மாவட்டம் முக்கடல் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்கள் அனீஸ்(24), சுபின்(21). இவர்கள் நேற்று முன்தினம்(மே 5) பூதப்பாண்டி அருகே மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, சுற்றுலா வேன் ஒன்று இவர்களது பைக் மீது மோதியது. படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று(மே 6) உயிரிழந்தனர். பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிந்து வேன் டிரைவர் சுரேஷ் குமாரை கைது செய்தனர்.

News May 7, 2024

சென்னை சிக்னல்களில் நிழல் பந்தல்!

image

சென்னையில், வாட்டும் வெயிலிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நேற்று(மே 6) செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், வாகன ஓட்டிகளுக்காக சிக்னலில் நிழல் பந்தல் அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி உள்ளிட்ட 10 பகுதிகளில் அடுத்த 3 நாளில் நிழல் பந்தல் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.

News May 7, 2024

நீலகிரி வருவதற்கு இவ்வளவு நபர்களா? E-PASS

image

நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்கு இன்று
(மே 7) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்று வர வேண்டும். இதன் அடிப்படையில் நீலகிரிக்கு சுற்றுலா பேருந்து, கார், ஜீப், பைக் வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் வருவதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து 21,446 பேர் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

News May 7, 2024

பெண் யானை ரயில் மோதி பலி

image

கேரள மாநிலம் பாலக்காடு பன்னிமடை ரயில்வே கேட்டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து கோவை வழியாக சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சம்பவ இடத்தில் பாலக்காடு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் கோட்டைக்காடு என்ற இடத்தில் ரயில் மோதியதில் யானை ஒன்றிற்கு காலில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!