India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடிக்கு நேரில் வர இயலாத வாக்காளர்களுக்கான 12D க்கான படிவத்தினை தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வங்கி ஊழியர் காலணியில் வசிக்கும் 88 வயது மூத்த குடிமகன் சீனிவாசன் என்பவருக்கு ஆட்சியர் தீபக் ஜேக்கப் இன்று வழங்கினார்.
உடன் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் பலர் இருந்தனர்.
திமுக கூட்டணியில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய எம்.பி ஜோதிமணி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன் ஆகியோரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு கேட்டு வருகின்றனர். இதனால் கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் குளப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர். நடராஜன் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், இந்த முறை இந்தத் தொகுதியில், பாஜக-விற்கு வாய்ப்புள்ளதால் திமுக-வே போட்டியிட முடிவு செய்தது. திமுக சார்பில், கணபதி பி. ராஜ்குமார் போட்டியிடவுள்ளார். இவர் 2014இல் கோயம்புத்தூரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து திமுக-வில் இணைந்தார்.
தென்காசி சட்டமன்றத் தேர்தல் அலுவலகத்தில் இன்று மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்ட சமத்துவ கட்சியின் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த மாநில மாவட்ட நகர நிர்வாகிகளை பாஜகவினர் வரவேற்றனர்.
ஆற்காடு பகுதியில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் பார்வதி சிவன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் காணாமல் போனதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தென்காசியை சேர்ந்த திருமலை என்பவர் ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய தனது சகோதரர் கணேசன் காணாமல் போயுள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணையில், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில் 6 பேர் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தஞ்சையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வாக்காளர் என்பதில் பெருமைப்படுங்கள் , வாக்களித்து ஜனநாயகததை காப்பாற்றுங்கள் என எழுதப்பட்ட பலகையில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஆணையர் மகேஷ்வரி, கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கையெழுத்து இட்டனர். பின்னர் தொடங்கிய பேரணியை இன்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உலக காடுகள் தண்ணீர் தினங்களை முன்னிட்டு நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் நாமக்கல் மாவட்ட வனத்துறை கல்லூரி சுற்றுச்சூழல் பசுமை மன்றங்களின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வனத்தில் தீ பரவினால் உடனடியாக தகவல் தர வேண்டும் எனவும் விலங்கு மனித மோதல் குறித்தும் பேசப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் வனத்துறையினர் உள்ளிடோர் விழாவில் பங்கேற்றனர்.
ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுகவுக்கு அளிக்கப்பட்டிருந்தது.தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது.இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார்.இந்தத் தேர்தலில் திமுக இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான். தாராபுரம், காங்கேயம் ஆகியவை இத்தொகுதியில் அடங்கும்.
அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்பது, சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தலில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக களப் பணியாற்றி, வேட்பாளர் சந்திரகாசன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்வது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Sorry, no posts matched your criteria.