India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று (மார்ச் 23) பணிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் இன்றைக்குப் பதிலாக மார்ச் 30ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, கடலூர் டவுன்ஹால் அருகே 100% வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளின்
வாகனங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று (22.03.2024) ஒட்டுவில்லைகளை ஒட்டினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்
இராஜசேகரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று நம் பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் சென்றடைந்தார். இதனை அடுத்து கோவிலில் இன்று வருடத்திற்கு ஒருமுறை நிகழும் சேர்த்தி சிறப்பு சேவை நடைபெற்றது. இதனை ஒட்டி நம் பெருமாள் மற்றும் கமலவல்லி நாச்சியார் இருவரும் இணைந்து கோவில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர்.
திருச்சி சிறுகனூர் பகுதியில் திருச்சி மக்களவை தொகுதி மற்றும் பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதை முன்னிட்டு உரையை தொடங்குவதற்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மற்றும் முன்னாள் நிதியமைச்சர் அன்பழகன், பெரியார் மற்றும் அண்ணா உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் உரை நிகழ்த்தினார்.
திருச்சி மாவட்டத்தில் திமுக பிரச்சாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து திமுகவினர் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் இன்று திருச்சியை நோக்கி படையெடுத்து வந்தனர். இதையடுத்து பிரச்சார திடலில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அனைத்தும் தொண்டர்களால் ஆக்கிரமிப்பு செய்து சிறுகனூர் பகுதி முழுதும் மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்தது.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சி சிறுகனூரில் முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு , திமுக என்றென்றும் இளைஞர்களுக்கான வளர்ச்சியை ஏற்படுத்தும் இயக்கம் என்றும் பெரம்பலூர் தொகுதியின் வெற்றியை முதல்வருக்கு சமர்பிப்பேன் என உறுதியளித்தார். நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இதுவரை 3704 சுவர் விளம்பரங்களும், 6864 சுவரொட்டிகளும், 1174 பதாகைகளும், 751 இதர விளம்பரங்களும் அகற்றப்பட்டு, 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் திருச்சி தேர்தல் பரப்புரை பயணத்தின் போது புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா, நாஜிம், சம்பத், எம்எல்ஏக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
பெருங்குளம் அருகே நதிப்பாலம் விலக்கில்
இரவில் அவ்வழியே செல்வோரை ஒரு கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டுவதாக ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் சிலர் புகாரளித்தனர். இது தொடர்பாக விசாரணையில் பெருங்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், கேதீஸ்வரன், முகிலன், அஜய் & 3 சிறுவர் உட்பட 7 பேரை உச்சிப்புளி போலீசார் இன்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோட்டூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த மதுரையை சேர்ந்த ராமச்சந்திரனை (38) கைது செய்தனர். பின் கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அவரை இன்று சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வருடத்தில் கோவையில் 17 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர் என்றார்.
Sorry, no posts matched your criteria.