Tamilnadu

News March 23, 2024

நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த ராமு மற்றும் அவரது மனைவி மீனா இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் ராமுவை கொலை செய்த ராமுவின் தாய் மாமன் ஆறுமுகம் என்பவர் மீது நடைபெற்ற வந்த கொலை வழக்கில் ஆரணி கூடுதல் அமர்வு நீதிபதி திருமதி விஜயா  ஆயுள் தண்டனை விதித்து நேற்று(மார்ச்.22) தீர்ப்பளித்தார்.

News March 23, 2024

ராம்நாடு அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

image

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, அன்வர்ராஜா, கீர்த்திகா முனியசாமி, Ex அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

News March 23, 2024

திருச்செங்கோட்டில் கடையை உடைத்து பணம் கொள்ளை

image

திருச்செங்கோட்டின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே, சங்ககிரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள செல்லாஸ் ரெடிமேட் கடையிலும், ஸ்மார்ட் மொபைல் கடையிலும் கடையை உடைத்து கல்லாவில் இருந்த பணம் நேற்றிரவு திருடபட்டுள்ளது . சுமார் இரண்டு லட்ச ரூபாய் அளவில் திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது .சிசிடிவி காட்சிகளை வைத்து திருச்செங்கோடு நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 23, 2024

திருச்சி:மேம்பால கட்டுமான பணி: போக்குவரத்து மாற்றம்

image

திருச்சி தில்லைநகர் பகுதியில் இருந்து சத்திர பேருந்து நிலையம் செல்லும் வழியில் மாரிஸ் தியேட்டர் அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் சேதமடைந்துள்ளதால் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே இந்த பிரதான சாலை வழியாக நேற்று வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மாறாக கரூர் பைபாஸ் சாலை மற்றும் ராமகிருஷ்ண பாலம் வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

News March 23, 2024

வெயிலின் தாக்கத்தால் நிழற்குடையில் பதுங்கும் பயணிகள்

image

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று(மார்ச்.23) வெயிலின் தாக்கத்தால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் நிழற்குடையின் கீழ் தஞ்சம் அடைகின்றனர். மேலும் மதிய வேளைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. மேலும் நிழற்குடைகள் போதுமானாதாக இல்லை என பயணிகளிடையே குற்றசாட்டுகள்  எழுந்துள்ளது.

News March 23, 2024

கிருஷ்ணகிரி அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணா ரெட்டி, கே.அசோக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

News March 23, 2024

திருப்பத்தூர் அருகே போலீசார் குவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் தங்க மலையில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ சென்றாய சுவாமி ஆலயத்தின் 95 ஆம் ஆண்டு உற்சவ விழாவின் ஐந்தாம் நாளான இன்று மாலை 6 மணிமுதல் 7 மணிக்குள் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் நாட்றம்பள்ளி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 23, 2024

செங்கல்பட்டு அருகே வெடித்தது போராட்டம்

image

மேடவாக்கத்தை சேர்ந்தவர் பாலு நேற்று தனது குடும்பத்துடன் செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது காரில் சென்றுள்ளார். செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் பாலுவின் காரில் இருந்த “Fastag” ஸ்கேன் ஆகாததால் சுங்கசாவடி ஊழியர், பாலு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தீடிரென சுங்கசாவடி ஊழியர்கள் பாலுவை தாக்கியுள்ளனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News March 23, 2024

மதுரை: சைவ பிரியர்களுக்கு இது வரப்பிரசாதம்

image

சைவ பிரியர்களுக்கு விட்டமின் ஏ, டி பற்றாக்குறையை நீக்க குறுந்தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் பால் உதவுகிறது என மதுரையில் நேற்று நடந்த பயிலரங்கில் துணைவேந்தர் கீதாலட்சுமி பேசினார். அப்போது, “விட்டமின் பி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் அதிகமுள்ள இந்த பாலில் அலர்ஜியை ஏற்படுத்தும் குளூட்டான் மற்றும் லாக்டோஸ், கொழுப்புச்சத்து இல்லாததால் -இது விலங்குகளிடமிருந்து பெறும் பாலை விட சிறந்தது” என்றார்.

News March 23, 2024

தேனி அருகே டூவீலர் மோதி விபத்து

image

அணைப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமணி. எலக்ட்ரீசியனான இவர் தனது டூவீலரில் கம்பம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ரோட்டை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த டூவீலர் அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் பலத்த காயங்களுடன் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!