India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டம் சாமாந்தான்பேட்டையில் உள்ள மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் நாகப்பட்டினம்(தனி) மக்களவைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ராஜ் சத்யன், மற்றும் நிர்வாகிகள் பாண்டியன், முகில் ஆகிய 6 பேரை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
பௌர்ணமி (24.03.2024), பங்குனி உத்திரம் (25.03.2024), பண்ணாரி குண்டம் (25.03.2024) மற்றும் வார இறுதி நாட்களான (23.03.2024-24.03.2024) ஆகிய நாட்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து பழனி செல்ல 30, திருவண்ணாமலை செல்ல 25, பண்ணாரி கோவிலுக்கு மற்றும் வெளியூர்களுக்கு செல்ல 50 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிட், இன்று தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் அரசுப்பள்ளி, லயன்ஸ்கிளப், நேருயுவகேந்திரா அறிவியல் இயக்கம் போன்றவைகள் இணைந்து நெகிழியை தவிர்ப்போம், மஞ்சள் பையை மீண்டும் பயன்படுத்துவோம் என்றும், பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி: முட்டம் கடற்கரையில் இன்று அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு மணற்சிற்பத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, , முட்டம் ஊராட்சி தலைவர் நிர்மலா ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கம் இன்று (23.03.2024) நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தெரியவந்த நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட கூடிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் மற்றும் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த ராபர்ட் புருஸ் என்பவர் போட்டியிடுவதாக இன்று (மார்ச் 23) தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று மதுரை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார். அதிமுகவை பொறுத்தவரை தலைமை அறிவிக்கும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றி பெற செய்ய தொண்டர்கள் சுழன்று வேலை பார்ப்பார்கள் என்றார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதைதொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் கனிமொழியை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக நெல்லை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா இன்று (மார்ச் 23) நேரில் சென்று தனது வாழ்த்தை தெரிவித்தார்.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம், கடலூர் மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஆர்.கே.பி கதிரவன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தொகுதிகளில் உள்ள மாவட்ட, சட்டமன்ற, ஒன்றிய, நகர, பேரூர் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.