India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர், வீரபாண்டியை சேர்ந்த சுடர்க்கொடி (36) என்ற பெண் விபத்தில் சிக்கி, தலையில் படுகாயமடைந்த நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. சுடர்க்கொடியின் சடலத்துக்கு, மருத்துவமனை டீன் முருகேசன், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஒட்டுமொத்த மருத்துவ அதிகாரிகளும், ஊழியர்களும் அணிவகுத்து நின்று, நேற்று அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பழனி தலைமையில் ஆட்சியர்க கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தி.மலை மாவட்டம் செங்கோட்டை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன். கட்டிட தொழிலாளி. நேற்று மாலை வேலை முடித்துவிட்டு அனாதிமங்கலம் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருப்பத்தூர் மாவட்ட பிரிவின் கேலோ இந்தியா கால்பந்து மையத்தில் கால்பந்து பயிற்றுநர்களுக்கான இடம் காலியாக உள்ளது. இதற்கு தகுதியான கால்பந்து பயிற்றுநர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை வருகிற 28/05/’24 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு வரும் மே 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
போடி ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கோமதி என்பவருக்கும் பொது சுவர் குறித்து பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி செல்வியை கோமதியும் அவரது கணவர் பைரவகுமாரும் சேர்ந்து அசிங்கமாக பேசி அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து செல்வி நேற்று போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
ஈரோடு மாவட்டத்தில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 25% இட ஒதுக்கீட்டில், 104 மெட்ரிக் பள்ளிகள், 1 சுயநிதி பள்ளி, 77 மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளில் 2,299 இடங்களுக்கு 3,137 பேர் விண்ணபித்துள்ளனர் . அந்தந்த பள்ளிகளில் உள்ள இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள பள்ளிகளில் வரும் 28ஆம் தேதி குலுக்கல் நடைபெறும் என ஈரோடு கலெக்டர் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள ஆக்கிணாம்பட்டு கிராமத்தில் நில தகராறில் தம்பியை அண்ணன் மற்றும் அண்ணனின் இரு மகன்கள் சேர்ந்து அடித்த கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்யூர் போலீசார் விசாரணை செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் உள்ள உரம் பூச்சி மருந்து கடைகளில் சிவகங்கை மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன், வேளாண் அலுவலர்கள் பாலகணபதி, நாகராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். பல மாதங்களுக்குப் பின் பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மொடக்குறிச்சி தாலுகா புது அண்ணாமலை பாளையத்தில் வடமதுரை மதுரைவீரன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இக்கோவில் பொங்கல் திருவிழா கடந்த 17ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி 23ஆம் தேதி காலை பக்தர்கள் காவிரி ஆறு சென்று தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பொங்கல் வைக்கும் விழா மகா அபிஷேகம், அன்னதானம் மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உமர் ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல் நாள் போர்வை போர்த்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து உலக அமைதிக்காகவும் நாட்டில் நல்லாட்சி மலரவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Sorry, no posts matched your criteria.