Tamilnadu

News May 25, 2024

தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளர்கள் 3 பேர் கைது

image

ராயப்பேட்டையை சேர்ந்த ஒய்வு பெற்ற அண்ணா பல்கலைக்கழக கவுரவ பேராசிரியர் ஹமீது உசேன். இவர் தந்தை அகமது மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான். இவர்கள் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் – உத்- தஹ்ரீர் இயக்க கொள்கைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வந்தனர். இதை கண்காணித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து மூவரையும் நேற்று கைது செய்தனர்.

News May 25, 2024

திண்டிவனத்தில் கையெழுத்து இயக்கம்

image

திண்டிவனம் அடுத்த வட ஆலப்பாக்கத்தில் திண்டிவனம் நகரத்தின் ஒட்டுமொத்த நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதிக்கும் தனியார் மினரல் வாட்டர் கம்பெனியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி மே 27ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது என அக்கட்சி அறிவித்துள்ளது. இதில் மு.சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

News May 25, 2024

அறங்காவலர் குழுவுடன் எம்எல்ஏ ஆலோசனை

image

திருப்பூரில் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இன்று கோவிலில் அறங்காவலர் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். நடந்து முடிந்த விழா பற்றியும், கோவிலில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில் பணியாளர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News May 25, 2024

பட்டா மாறுதல் – தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கை!

image

சென்னை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை, 16 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா வாரியாக துணை ஆட்சியர் நிலையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. நடைமுறையை விரைவு படுத்தி கண்காணிக்க, ஒவ்வொரு தாலுகாவுக்கும் சிறப்பு அலுவலரை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார்.

News May 25, 2024

குமரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (25.5.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னலுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 25, 2024

போதை ஊசி செலுத்தியவர் மயங்கி விழுந்து சாவு

image

புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையைச் சேர்ந்த அமீர் பாஷா மகன் ஜாகீர்(17). நேற்று பிற்பகல் 3 மணியளவில் பிராட்வேயில் உள்ள தனது நண்பர் வீட்டில் வைத்து போதை ஊசியை செலுத்தினார். பின் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறினர். எஸ்பிளனேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 25, 2024

நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (25.5.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லையில் இடி மின்னலுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 25, 2024

தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசியில் இடி மின்னலுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 25, 2024

காஞ்சியில் நாளை திருத்தேர் விழா.

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ தேவராஜ சுவாமி கோவிலில் நாளை காலை 4 மணிக்கு திருத்தேர் உற்சவ வீதி உலா நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யும்மாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 25, 2024

கிருஷ்ணகிரி அருகே 509 கிலோ பறிமுதல்

image

ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தக்காளி மண்டி பகுதியில் உரிய அனுமதி பெறாமல் பட்டாசு கடை நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு சென்ற காவல் துறையினர் மஜாஷ் அகமத்(39), த/பெ அப்சல் பாஷா, அனிஷ்(26) த/பெ அஷேன், முரளி(27) த/பெ. தியாகராஜன் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.9,70,000 மதிப்புடைய 509 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!