Tamilnadu

News May 28, 2024

நாமக்கல் கலைக் கல்லூரியில் சேர்க்கை தொடக்கம்

image

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.2024-2025ம் ஆண்டிற்கான இக்கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தரவரிசை அடிப்படையில் மின்னஞ்சல் வாட்ஸ்அப் கைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தரவரிசை பட்டியல் aagacnkl.edu.in என்ற கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

நாமக்கல்: ஜூன் 5 ஆம் தேதி ஓவியப் போட்டி

image

நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கத்தின் வெள்ளி விழா டிரினிட்டி சிபிஎஸ்இ கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு பசுமை தமிழக மக்கள் இயக்கத்துடன் இணைந்து உலக சுற்றுசூழல் தினத்தன்று மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி வரும் 05.06.24, புதன்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி நாமக்கல் டிரினிட்டி இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

News May 28, 2024

மருந்து சாப்பிட்ட 10 மாடுகள் பலி

image

வந்தவாசி அடுத்த பொன்னூர் மலைப்பகுதியில் காட்டு பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த வெடிபொருட்களை அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் வெடி மருந்துகளை சாப்பிட்டதால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பலியானது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் பொன்னூர் காவல் நிலையத்திலும் வனத்துறையினரிடமும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பொன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 28, 2024

குழந்தை இறந்தத சோகத்தில் தந்தை தற்கொலை

image

நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் பழனி (32). இவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி காயத்திரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.பின்னர் சிறிது நேரத்தில் அக்குழந்தை உயிரிழந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த பழனி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 28, 2024

புதுக்கோட்டை அற்புதமான சித்தன்னவாசல் ஓவியங்கள்!

image

புதுக்கோட்டையில் சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் உள்ளது பிரபல குகை ஓவியங்கள். சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இதன் அருகிலேயே சமணர் படுக்கைகள், மற்றும் தமிழ் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.1990களில் இது செயற்கை வண்ணத்தால் புதுப்பிக்கப்பட்டது.

News May 28, 2024

மே.30 இல் அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு

image

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. அதில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படை வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறும் என பள்ளி முதல்வர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

கோபி அருகே சிறுத்தை நடமாட்டம்

image

கோபி அருகே உள்ள பெருமுகை கிராமம் கரும்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் எனவும் கால்நடைகளை பாதுகாக்க வைக்க வேண்டும்  என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிறுத்தையை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 28, 2024

தஞ்சாவூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபடுதல் மற்றும் விளையாட்டு, சமூக சேவை ஆகிய துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய 5 முதல் 18 வயதுடைய குழந்தைகளை பாராட்டி கெளரவிக்கும் விதமாக மத்திய அரசால் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான இவ்விருதினை பெற தகுதியுடைய குழந்தைகள் http://awards.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தீபக் ஜேக்கப் வேண்டுகோள்.

News May 28, 2024

பழனி மலை ரோப் கார் சேவை நிறுத்தம் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் உள்ள ரோப் கார் (கம்பி வடம் ) சேவை 30.05.2024 மாதாந்திர பராமரிப்பு காரணமாக அன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் இன்று அறிவித்துள்ளது. வழக்கம் போல இழுவை ரயில் சேவை தொடரும் எனவும், அன்று ஒரு நாள் அந்த சேவையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News May 28, 2024

நாமக்கல் பழங்குடியினருக்கு ஆட்சியர் அறிவிப்பு 

image

நாமக்கல் பழங்குடியினர் நல கல்வி உதவித்தொகை மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் 24-25ம் ஆண்டிற்கான முதுநிலை முனைவர் ஆராய்ச்சியின்படி, உயர் படிப்பை வெளி நாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. https://overseas.tribal.gov. in/என்ற இணையதளத்தில் 31.05.24 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!