India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொள்ளாட்சி மக்களவை தொகுதி வேட்பாளராக கே. ஈஸ்வரசாமி அவர்களை திமுக அறிவித்தது. இந்தநிலையில், பொள்ளாட்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சு.முத்துச்சாமி, அர.சங்கரபாணி மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.கழல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
கோவையில் 2022 நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது உசேன், ஜமேசா மரி உள்ளிட்ட 3 பேரை கோவை போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என தகவல்கள் கூறுகின்றன.
பொள்ளாட்சி மக்களவை தொகுதி வேட்பாளராக கே. ஈஸ்வரசாமி அவர்களை திமுக அறிவித்தது. இந்தநிலையில், பொள்ளாட்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சு.முத்துச்சாமி, அர.சங்கரபாணி மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.கழல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முறையான அனுமதியின்றி கூட்டம் கூட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி ஆகியோர் மீது தரமணி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகை மீன்வள பல்கலைகழகத்துக்கு ஜெயலலிதா பெயர் வைக்கும் பரிந்துரையை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். மீன்வள பல்கலைகழகத்துக்கு ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக ஆளுநர் அனுப்பிய இந்த பரிந்துரையை நிராகரிப்பதாக அரசுக்கு குடியரசுத் தலைவர் கடிதம் எழுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவிலில் நகை மற்றும் பணத்துடன் இருந்த பர்ஸை செந்தில்குமார் என்பவர் தவறவிட்டார். அதனை கண்டெடுத்த ராதாகிருஷ்ணன் என்பவர் முகவரியை பார்த்து தொடர்பு கொண்டு உரியவரிடம் பர்சை ஒப்படைத்தார். தொடர்ந்து ராதாகிருஷ்ணனின் செயலை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இன்று பாராட்டினர்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று 23.03.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப., துணை காவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் ஆகியோர் உள்ளனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக அருணாச்சலம் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டார் தேமுதிக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
மதுரையைச் சேர்ந்த தினேஷ் குமார் 19 , ஸ்ரீதர் 20 ஆகிய இரு நண்பர்கள் இன்று மதுரையிலிருந்து உசிலம்பட்டி நோக்கி பைக்கில் சென்றுள்ளனர். அப்போது செக்கானூரணி அருகே அழகுசிறையில் வைத்து சாலையின் இடதுபுறம் இருந்த மரத்தின் மீது பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பாராளுமன்றத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு விருதுநகரில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 31ம் தேதி அன்று காலை 7 மணி அளவில் கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.எனவே கல்லூரி மாணாக்கர் இந்த போட்டியில் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.