Tamilnadu

News May 29, 2024

மதுரை காமராஜ் பல்கலை கன்வீனர் குழு தேர்வு

image

மதுரை காமராஜ் பல்கலை கழகத்தின் துணைவேந்தராக இருந்த குமார் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பல்கலையை வழிநடத்தும் கன்வீனர் குழு கல்லுாரி கல்வி இயக்குநர் கார்மேகம் தலைமையில் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் கவர்னர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின்னர் இக்குழு செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது

News May 29, 2024

பெரம்பலூர்: விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2024ம் ஆண்டிற்கு வழங்கப்பட இருக்கிறது. இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) 20.6.2023-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேற்று(மே 28) தகவல் தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

தருமபுரி அருகே குடியிருப்பில் புகுந்த சாரைப்பாம்பு

image

தருமபுரி வட்டம் அனசாகரம் அடுத்த செங்குந்தர் நகர் கிராமத்தில் குடியிருப்பில் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு இருப்பதாக தீயணைப்பு துறைக்கு நேற்று(மே 28 ஆம் தேதி) தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி, பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

News May 29, 2024

தூத்துக்குடி: கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்

image

தூத்துக்குடி 49ஆவது வாா்டுக்குள் ராஜபாண்டி நகா், எம்ஜிஆா் நகா் பகுதி மக்களின் கோரிக்கையின்படி, கருவேல மரங்களை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இப்பணியை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கீதா ஜீவன் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். தொடா்ந்து, சண்முகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீா் குழாய் பராமரிப்பு பணிகளையும் அமைச்சா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News May 29, 2024

கரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

image

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்திற்கு இன்று (மே.29) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (மே.29) விடுமுறைக்கு பதிலாக ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து கரூர் ஆட்சியர் தங்கவேல் உத்தரவிட்டுள்ளார்.

News May 29, 2024

திண்டுக்கல்: களைகட்டிய பலாப்பழ சீசன்

image

சிறுமலை செட் மார்க்கெட்டில்
தற்போது பலாப்பழ சீசன் களைகட்டியுள்ளது. சிறுமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட பழங்கள் மட்டுமல்லாது, நாட்டு பழங்கள், புதுக்கோட்டை பழங்கள், பண்ருட்டி பழங்கள், கேரளா பழங்கள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் பலாப்பழங்கள் வரத்து இருந்தது. காலை 6 மணிக்கு வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். முதல் நாளிலேயே சிறுமலை பலாப்பழம் ரூ.1000 வரை ஏலம் போனது.

News May 29, 2024

பாதுகாப்பு பணிக்கு போலீசார் வருகை

image

கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றில் விடும் விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக திருச்சி, உளுந்தூர்பேட்டை, வேலூரில் இருந்து சிறப்பு காவல் படையினர் 125 பேர் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த 600 போலீஸாருடன் உள்ளூர் போலீஸார் 300 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று (28.05.2024) திடீர் ஆய்வு செய்தார். அப்போது, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வாளர் மற்றும் பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

News May 29, 2024

திருப்பூர்: வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் கைது

image

திருப்பூர் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம் இளைஞர்கள் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் வடக்கு காவல் நிலைய குற்ற பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

News May 29, 2024

காதலர்கள் தற்கொலை – போலீசார் விசாரனை

image

திருச்சியை சேர்ந்த முத்துக்குமாரும் காரைக்குடியை சேர்ந்த சுபஸ்ரீயும் காதலித்து வந்தனர். வேலையின் நிமித்தமாக முத்துக்குமார் காரைக்குடியில் தங்கி இருந்த நிலையில் நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலை அறிந்து சுபஸ்ரீயும் தான் படிக்கும் புதுக்கோட்டை அருகே உள்ள நர்சிங் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

error: Content is protected !!