Tamilnadu

News May 29, 2024

கோவை: திருட முயன்றவர் அடித்து கொலை

image

கோவை பீளமேடு தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மணி என்பவர் உள்ளே நுழைந்து இரும்பு கம்பிகளை திருட முயன்றுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 29, 2024

விருதுநகர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒருவர் பலி

image

ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூா் சோ்ந்த விக்னேஸ்வரன்.இவா் குலசேகரப்பேரி கண்மாய் அருகே தனியாா் கிணற்றில் குளிக்கச் சென்றாா்.வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் இவரது உறவினா்கள் அங்கு சென்று பாா்த்தனா்.ஆடைகள் கிணற்றின் அருகே கிடந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விக்னேஸ்வரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.தளவாய்புரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News May 29, 2024

ஜிப்மரில் முதுநிலை செவிலியா் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

image

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மரில் எம்.எஸ்சி., எம்.பிஎச்., பி.பி.டி., பி.ஜி.டி, பிஜி. எஃப் ஆகிய முதுநிலை செவிலியா் படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் ஜூன் 20-ஆம் தேதி மாலை 4.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்
ஜிப்மா் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் செவிலியா் முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தோ்வு வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

News May 29, 2024

ஆவின் நிறுவன ஓட்டுநர்களின் போராட்டம் வாபஸ்

image

திருச்சி கொட்டப்பட்டு நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் செயல்படும் வேன்களுக்கான வாடகை சுமார் இரண்டு மாதமாக நிலுவையில் இருந்ததால் வேன் உரிமையாளர்கள் இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 80 லட்சம் லிட்டர் பால் விநியோகம் தடைபட்டது. இந்த நிலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இன்று மாலை வழக்கம் போல் பால் விநியோகம் தொடரும் என தெரிவித்தனர்.

News May 29, 2024

தேனி: மே 31 வரை அவகாசம் நீட்டிப்பு

image

தேனி மாவட்டம் சட்டம் சார் தன்னார்வலர் பதவிக்கு விண்ணப்பிக்க மே 27ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மே 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தேனி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி கே.அறிவொளி அறிவித்துள்ளார். இது குறித்த மேலும் விவரங்களுக்கு https://districts.ecourts.gov.in/dlsa-theni என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 29, 2024

கோவையில் செய்தியாளர் உயிரிழப்பு

image

பொள்ளாச்சி சன் டிவி ரிப்போர்டரும் , தினமணி புகைப்பட கலைஞருமான அஜய் என்பவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். இந்தநிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரது இழப்பு கோவை, மற்றும் பொள்ளாச்சி பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News May 29, 2024

தருமபுரி: அண்ணனை கொன்று புதைத்த தம்பி!

image

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, அனுமந்தபுரம் அடுத்த சாவடியூர் கிராமத்தில், ஆண் சடலம் ஒன்று குப்பையில் புதைக்கப்பட்டிருந்தது. விசாரணையில், இறந்தவர் பாலக்கோடு பகுதியை சேர்ந்த மோகன்(38) என்றும், முன் விரோதம் காரணமாக சொந்த தம்பியான ரகு(35) அடித்துக் கொலை செய்து வீட்டின் அருகே குப்பையில் புதைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து இன்று(மே 29) காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 29, 2024

பனை நொங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூர் காழியப்ப நல்லூர் காட்டுச்சேரி பொறையார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாலை ஓரங்களில் பனை நொங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. சில நாட்கள் மழை பெய்ததன் காரணமாக நொங்கு விற்பனை பாதிக்கப்பட்டது. மீண்டும் தற்பொழுது வெயில் காட்டத் தொடங்கியுள்ளதால் நேற்று பனை நொங்கு விற்பனை அமோகமாக நடைபெற்றது.

News May 29, 2024

தென்காசி அருகே ஐந்து பேர் கைது

image

கடையம் அருகே மேல குத்தபாஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (55).இவர் வீட்டு அருகில் உள்ள கேட்டை புறம்போக்கு நிலம் எனக் கூறி மணிராஜ் (27), அவரது சகோதரர்கள் மாரிசெல்வம் (25), பிரசாத் பாபு (21),சிவா (19) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய ஐந்து பேர் சேர்ந்து கேட்டை உடைத்து ,அர்ஜுனனை கல்லால் தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

News May 29, 2024

புதுக்கோட்டை அருகே 5 பேர் கைது

image

அன்னவாசல் மேட்டுத்தெருவில் பொது இடத்தில் நேற்று சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சத்யாதேவி உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த மேட்டுத்தெருவை சேர்ந்த குமார், நேரு, தேவா, மற்றும் இந்திரா காலணியை சேர்ந்த சக்கரவர்த்தி, மாணிக்கம் ஆகிய 5- பேரை போலீசார் கைது செய்தனர்

error: Content is protected !!