India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி நகரில் காந்தி சாலையில் 1993இல் இருந்து செயல்பட்டு வருகிறது அரசு அருங்காட்சியகம். தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கி இந்த அருங்காட்சியகத்தில், நடுகல் (வீரக்கல்), பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல்சிலைகள், மரப் படிமங்கள், கலைப்பொருட்கள், பனையோலைகள், தொல்தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், மனித உடல் மாதிரிகள் ஆகியன உள்ளன.
மதுரை சத்ய சாய் நகரை சேர்ந்த என்.ஜி.மோகன் கடந்த 2019ல் தேனி மாவட்டம் போடி தாலுகா அலுவலகத்திற்கு மேல சொக்கநாத கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். 1550 நாட்களாக பதில் அளிக்காததால் சென்னை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த தமிழ்நாடு தகவல் ஆணையம் வட்டாட்சியருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி காட்டியுள்ளது.
காஞ்சி வரதராஜ சுவாமி கோயிலில் வைகாசித் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது அனந்தசரஸ் திருக்குளத்தில் புனித நீராடினர். இதையொட்டி, பிராணதார்த்தி ஹரிவரதர் எனும் தீர்த்தபேரர் சிறிய பல்லக்கில் கோயில் வளாகத்தில், அனந்தசரஸ் திருக்குளத்துக்கு எழுந்தருளினார். கோயில் பட்டாச்சாரியார் தீர்த்தபேரருடன் குளத்தில்
நீராடினார்.
மேற்குத் தொடர்ச்சி மலையில், 895 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது இந்தியாவின் 17ஆவது புலிகள் காப்பகமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம். 1962இல் உருவாக்கப்பட்ட களக்காடு புலிகள் சரணாலயம் மற்றும் முண்டந்துறை புலிகள் சரணாலயம், இணைத்து 1988இல் இக்காப்பகம் உருவாக்கப்பட்டது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில் முக்கிய பணியாற்றியதற்காக, இதற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் சிறந்த விருது கிடைத்தது.
மதுரை ஆண்டாள்புரம் வெங்கடேஸ்வரன்(50). அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியராக உள்ளார். நேற்று கல்லூரிக்கு சென்ற இவரை வழிமறித்த 4 பேர் கடுமையாக தாக்கியதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விசாரணையில் வெங்கடேஸ்வரன் சகோதரரான திருச்சி மின்அமலாக்கத்துறை அதிகாரி கொண்டல்ராஜ் மகனுடைய விவாகரத்து வழக்கில் சகோதரர் தரப்பிற்கு ஆதவராக இருந்ததால் எதிர் தரப்பினர் தாக்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பழங்கள் விளைகின்றன. இதற்கு விவசாயிகள் மத்தியில் ஊக்குவிப்பு அளிக்கும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் பழ கண்காட்சி தோட்டக்கலை துறை மூலம் நடத்தப்படுகிறது. பழ கண்காட்சியில் பல்வேறு வடிவமைப்புக்காக பயன்படுத்தப்படும் பல டன் பழங்கள் வீணாகி வருகின்றன. இது விவசாயிகளின் உழைப்பை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற தூய இருதய ஆண்டவா் பசிலிக்காவின் 117-ஆம் ஆண்டு பெருவிழா வரும் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதில், புதுவை, கடலூா் உயா்மறை மாவட்ட பேராயா் கலிஸ்ட், மீரட் மறை மாவட்ட ஆயா் பாஸ்கா் ஏசுராஜ் ஆகியோா் பங்கேற்று கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைக்கின்றனா் . இதையடுத்து தினமும் காலை, மாலையில் திருப்பலிசிறப்பு மறையுரை, சிறிய தோ் பவனி நடைபெறுகின்றன
காவிரி கூட்டுக் குடிநீர் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பொதுமக்கள் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி வரும் 4ம் தேதி வரை நடைபெறுவதால் குடிநீர் குறைவாக விநியோகம் செய்யப்படும். இதனால் சிக்கனமாக குடிநீர் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைவர் தியாகராஜன் குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று (மே-28) சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தியாகராஜன் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் அவரது குடும்பத்தினர் ஆசி பெற்றனர்.
வேலூரிலுள்ள திப்பு மற்றும் ஹைதர் மஹால், வேலூர் கோட்டை வளாகத்தினுள் அமைந்துள்ளது. இந்த திப்பு மகாலின் மத்தியில் ஹால் உடன் கூடிய 180 அறைகள் உள்ளன. அதே போல் ஹைதர் மகாலிலும் 200 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேய ஆட்சியில் திப்பு வம்சத்தினர் இங்கு தான் தங்கவைக்கப்பட்டனர். தற்போது இந்த மகால் காவல் பயிற்சி அலுவலக நிர்வாக கட்டடமாக இருப்பதால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.