India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், ஒவ்வொரு ஆண்டும் மே.31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில், நிக்கோடினுக்கு அடிமையான நிலையிலிருந்து புகைபிடிப்போரில் 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும் என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர் வேல்முருகன் கூறினார்.
கோவை கொடிசியா வளாகத்தில் இரண்டாவது நாளாக இந்திய ராணுவ கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இன்று (மே.29) இந்திய ராணுவத்தில் இடம் பிடித்த பொருட்களை கண்டு ரசித்தனர். இதன் ஒரு பகுதியாக இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கியை ராணுவ வீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தங்களது பார்வையில் வைத்திருந்தனர்.
சென்னை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று(மே 28) நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில், “தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு குறைவாகவே உள்ளது” எனக் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள திமுக முன்னாள் எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன், “ஆளுநர் ரவி ஒரு கல்வியாளர் இல்லை. தமிழ்நாட்டைப் போல் விடுதலைப் போராட்ட வீரர்களை உயர்த்திப் பிடித்த மாநிலம் எங்கும் கிடையாது” என்று கூறினார்.
லயன்ஸ் கிளப் கடலூர் கோல்டன் சிட்டி சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மஞ்சகுப்பத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் டாக்டர் பிரவீன் ஐயப்பன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 7 மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.105,000 வழங்கப்பட்டது.
“சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், 268 மேஜைகள் மூலம் 321 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தமாக 922 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஜூன் 3 ம் தேதி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற உள்ளது” என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகள் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது. அந்த வகையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 35 லிருந்து 58, முள்ளங்கி ரூ. 22 லிருந்து 30ஆகவும் மேலும் கடந்த வாரம் கிலோ ரூ. 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட சுரைக்காய் தற்போது 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் கடலூர் பொதுமக்கள் காய்கறி வாங்க முடியாமல் திணறி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் திருவண்ணாமலையை சேர்ந்த தனது நண்பர் பாஸ்கர் என்பவரிடம் ரியல் எஸ்டேட் செய்வதற்காக பணம் கொடுத்து வைத்திருந்தார். அந்த பணத்தை நேற்று கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு விஸ்வநாதனை பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி மகன் ஆகியோர் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சார்ந்தவர் மூர்த்தி. இவரது 17 வயது மகன் நேற்று இரவு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சார்ந்த சிவா, k.முனீஸ்வரன், b.முனீஸ்வரன் உள்ளிட்ட 3 பேர் மது போதையில் சிறுவன் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு மது பாட்டிலால் சிறுவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மஜு (44). இவர் தூத்துக்குடி இபி காலனியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று பணியில் இருந்தபோது திடீரென இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாராம். இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சாத்தமங்கலம் பாலாற்றங்கரையில் பழைய கற்சிற்பம் இருப்பதாக கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சென்ற ஆய்வாளர்கள் வயல்வெளியில் பாதி புதைந்த நிலையில் 5 அடி உயரம், 2.5 அடி அகலம் கொண்ட, பல்லவர் இறுதிக் காலமான 9 – 10 நூற்றாண்டு பெண் தெய்வமான அரிதான கொற்றை சிற்பத்தை கண்டெடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.