Tamilnadu

News March 24, 2024

குடிநீர் கேட்டு சாலை மறியல்

image

கரூர், குளித்தலை அருகே இரணியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வளையப்பட்டியில் உள்ள 5-ஆவது வார்டு பகுதியில் பல நாட்களாக குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து பணிக்கம்பட்டி சந்தை நான்கு ரோடு பகுதியில் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

News March 24, 2024

தொழில்நுட்பத் திருவிழா‘24 டெக்பெஸ்ட் ’24’ !

image

சேலம் ஏவிஎஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘நேற்று
ஒரு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம், தொழில்நுட்பத் திருவிழா‘24 – டெக்பெஸ்ட் ’24’ நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் ராஜ விநாயகம் தலைமையில்,
பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமையை வெளிக்காட்டினர்.
வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழும், பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது.

News March 24, 2024

மீண்டும் வெடிக்கும் பிரபந்தம் பாடுதல் பிரச்சனை

image

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பிராமணர் அல்லாதவர் தேசிக பிரபந்தம் பாடக்கூடாது என மிரட்டும் தென்கலை பிரிவு பிராமணர்கள் குற்றச்சாட்டு. மேலும் தென் கலை பிராமணர்களின் செயலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து முகம் சுளிப்பு ஏற்படுத்தியது.

News March 24, 2024

நெல்லை: முருங்கைகாய் விலை கடும் சரிவு

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முருங்கைகாய் விலை உச்சம் பெற்றது. ஒரு கிலோ 400 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த மாத தொடக்கத்திலிருந்து இதன் விலை சரிய தொடங்கியது. வேகமாக சரிந்து வந்த முருங்கைகாய் விலை இன்று (மார்ச் 24) ஒரு கிலோ 25 ரூபாய்க்கு பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. 

News March 24, 2024

மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி

image

சிதம்பரம் மக்களவைத் தோ்தலையொட்டி அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மண்டல அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்து பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்துவது குறித்து விளக்கினார்.

News March 24, 2024

தஞ்சை, நாகை வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

image

திருவாரூர், கொரடாச்சேரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற வேட்பாளர்கள் தஞ்சாவூர் முரசொலி (திமுக) நாகப்பட்டினம் செல்வராஜ் (இ.கம்யூ.) ஆகியோரை அறிமுகம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். 

News March 24, 2024

பவானியில் 108 திருவிளக்கு பூஜை

image

பவானியில் பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் சார்பில் பவானி ராஜயோக தியான நிலையத்தில், 88 ஆவது திரிமூர்த்தி சிவஜெயந்தி விழா நேற்று மாலை நடந்தது. பல பிறவிகளுக்கு புண்ணியத்தை அடைய சோமநாதர் லிங்கத்துக்கு முன் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், பவானி சுற்று வட்டாரத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

News March 24, 2024

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் தேரோட்டம்

image

திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நடுக்கம் தீர்த்த பெருமான் எனும் கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. சரபேஸ்வரர் தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலில் உருத்திர பாத திருநாள் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் சாமி வீதி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

News March 24, 2024

காமராஜபுரத்தில் தமுமுக சார்பில் நோன்பு 

image

காமராஜபுரம் சமூக நல கூடத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இப்தார் நேற்று ( மார்ச்- 23) மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாஹூர் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக பொது செயலாளர் ஹாஜாகனி , துணை பொது செயலாளர் தாம்பரம் யாக்கூப் மாவட்ட அரசு தலைமை காஜி பஜ்லுல்ஹக் தாவூதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 24, 2024

100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு.

image

தி.மலை பெரியார் நகரில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அங்கன்வாடி மையங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சத்துமாவுடன் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட பாட்டிலினை மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று வழங்கினார்.

error: Content is protected !!