India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (மார்ச்.26) மக்களவைத் பொதுத் தேர்தலை முன்னிட்டு பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி தலைமையில் ஏற்றனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டது
திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கந்தா்வகோட்டையில் தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகில் நேற்று(மார்ச்.25) தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாவக்காடு என்ற இடத்தைச் சோ்ந்த க.மோகன்தாஸ் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.பின்பு பறக்கும் படையினா் அவற்றை பறிமுதல் செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு ஆதரவாக வருகின்ற 30 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சி உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுவதால் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை மாலை 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வருகின்ற 19.4.2024 நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தல் பணிக்காக முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் காவல்துறையினர், முன்னாள் தீயணைப்பு துறையினர், முன்னாள் சிறை துறையினர் ஆகியோர் வருகின்ற 17/4/2024 முதல் 19/4/2024 வரை 3 நாட்கள் தேர்தல் பணியாற்ற விரும்புவோர், தங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விருப்பத்தினை தெரிவிக்க திருச்சி மாவட்ட எஸ்பி இன்று தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணையின்போது வேன் டிரைவர் கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று, உயிரிழந்தார்.இதனிடையே, வேன் டிரைவர் இறந்ததற்கு இழப்பீடு மற்றும் வேலை வழங்க கோரி முருகனின் மனைவி மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஓட்டுநரின் மனைவி மீனா தொடர்ந்த வழக்கில் இன்று அங்கன்வாடி பணி வழங்க தென்காசி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ரவுடிகளை ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்து வருகின்றனர். அதன்படி குருசுகுப்பம் பகுதியை சேர்ந்த ஜான்சன், குணசேகர் ஆகிய 2 பேர் ஊருக்குள் நுழைந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இவர்களை ஊருக்குள் நுழைய தடை விதிக்குமாறு முத்தியால் பேட்டை போலீசார் தேர்தல் அதிகாரி குலோத்துங்கனுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
மதுரை, கே.புதூரைச் சேர்ந்தவர் பாலாஜி. அரசு போக்குவரத்து கழகத்தில், மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக பணியில் இருந்தபோது கொரோனாவால் இறந்தார்.
கணவர், இறந்ததால் கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை கேட்டு, பாலாஜியின் மனைவி ரம்யா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.
முதலமைச்சர் ஆணையின் பேரில் ரம்யா நேற்று மதுரை உலகனேரி கிளையில் கண்டக்டர் பணியை ஏற்றுக் கொண்டார்.
வரும் மக்களை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக தஞ்சாவூர் தொகுதியின் வேட்பாளராக ஹீமாயூன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 405 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.மற்றொரு பக்கம் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து திருநாவுக்கரசர், பிரவீன் சக்கரவர்த்தி, மீரா ஹுசைன்,மற்றும் ஹசீனா சைய்யது பெயர்கள் அடிபட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.