India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று(07.06.2024) மாலை துல் ஹிஜ்ஜஹ் பிறை தென்பட்டதால் வருகிற 17.06.2024(திங்கட்கிழமை) அன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஹஜ்ஜுப் பெருநாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக புதுச்சேரி மாநில அரசு டவுன் காஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்.
பழனி முருகன் கோயில் கிரி வீதியில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளித்து அகற்ற நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது. நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரி வீதியை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைப்பதை யாரும் தடுக்கக் கூடாது . விசாரணை ஜூன் 24 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-IV தேர்வுகள் வருகின்ற 09ம் தேதி நடைபெறுகிறது. இதில் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்களில் உள்ள 87 தேர்வு கூடங்களில் 24, 745 தேர்வாளர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு கூடங்களில்
தேர்வர்களுக்கு தேவையான குடிநீர் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ) உள்ளது. இந்த பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக ஜூன் 7ஆம் (இன்று) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, கடைசி நாள் ஜூன் 13 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசியின் நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் ராணி ஸ்ரீ குமார் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வெற்றிச் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் ராஜா எம்எல்ஏ, ஜெயபாலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிகளவு முட்டைகள் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. தினந்தோறும் சந்தையில் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று நாமக்கல்லில் 4.60 பைசாவிற்கு முட்டை விற்பனை செய்யப்படுகிறது .விலை உச்சத்திலிருந்து முட்டை விலை கணிசமாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்சியில் தூய்மை, அடிப்படை வசதிகள் சரி பார்க்கும் பணிகள் தீவிரம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு வரும் திங்கள்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படவுள்ளதால் முன்னேற்பாடாக புத்தகங்கள் சரிபார்ப்பு தொட்டிகள், கழிவறைகள் சுத்தம் செய்வது, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பின் பேரில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது.
கெட்டவர்களின் கனவு தகர்வதே நல்லவர்களின் வெற்றி தான், உங்களின் 400 என்ற கனவை வாக்காளர்கள் தகர்த்ததை விட கொண்டாட வேறு என்ன விசயம் வேண்டும் பிரதமரே? என நரேந்திர மோடிக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். “குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்கட்சிகள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை” என மோடி தெரிவித்த கருத்திற்கு இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருந்தது. இந்நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததால், நாமக்கல் நகராட்சியில் வழக்கம் போல இன்று பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 1433 – ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.