India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் ஐடி விங் மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நாளை (மார்ச்.27) ஆம் தேதி புதன்கிழமையன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என இன்று (மார்ச்.26) தகவல் வெளியாகி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியது. அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 181 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 43,270 மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் இன்று நடைபெற்ற தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வை சேலம் மாவட்டத்தில் சுமார் 936 மாணவ மாணவிகள் எழுதவில்லை என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் பெரமனூர் அருகே பெண்ணை கொன்று தண்ணீர் தொட்டியில் உடலை வீசிய வழக்கில், சக்திவேல் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், செய்வினை வைத்து தன் மனைவியை பிரித்ததால் கொலை செய்ததாக சக்திவேல் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜான்சி ராணிக்கு நெல்லை டவுனில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 26) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பிரதமருடன் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களை காண்பித்து நான் சிரித்தால் தவறு, நீங்கள் சிரித்தால் சரியா? என கேள்வி எழுப்பினார்.
புதுவையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான குலோத்துங்கன் உத்தரவின் பேரில் இன்று அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் அரியாங்குப்பம் புறவழி சாலை சிக்னல் அருகே சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பு கொடிகள் தாங்கிய கம்பங்களை ஜேசிபி மூலமாக அகற்றினர்.
நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து பணம் மற்றும் செல்போன்களை பறித்து சென்ற 2 நபருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையின் தலா ரூ.5,500 அபராதமும் கட்ட தவறினால் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்ட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் மூலம் பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா இன்று (மார்ச் 26) தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகேயனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது உறுதிமொழி படிவத்தை வாசிக்கும் போது பிரபாகரன் மீது உறுதியிட்டு கூறுகிறேன் என வாசித்தார். அதை ஏற்க மறுத்த தேர்தல் அதிகாரியான ஆட்சியர் கார்த்திகேயன் பேப்பரில் இருப்பதை மட்டும் மீண்டும் வாசிக்க செய்தார்.
மதுரை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி, தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான சங்கீதாவிடம் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அருகில் மகளிர் பாசறை சாராள், இளைஞர் பாசறை சாகின் பாத்திமா மற்றும் வழக்கறிஞர் பாசறை விக்னேஷ் ஆகியோர் உள்ளனர்.
நெல்லை பழைய பேட்டை பகுதியில் இன்று (மார்ச் 26) ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த பெண் ஒருவரை பேட்டை போலீசார் நெல்லை மாநகராட்சி தொண்டு நிறுவன அமைப்பில் ஒப்படைத்தனர். இந்த பெண் தனது பெயர் ஜீவா என்றும் ஆவுடையானூர் சொந்த ஊர் என்றும் சொல்கிறார். இவர் குறித்த விபரங்களை தெரிந்தவர்கள் 9976649066 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என “ஆர்- சோயா” தொண்டு நிறுவன அமைப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.