India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கீழ் எஞ்சின் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ITI, டிப்ளமோ & இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.18,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணல் செபடம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
ஆலத்தூர் ஒன்றியம், புது விராலிப்பட்டி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 22) பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு கட்டடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அடிக்கல் நாட்டினார். இதில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வல்லபன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <
நாகை மாவட்டம் முட்டம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம், மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர், அதே பகுதியை சேர்ந்த நரசிங்கமூர்த்தி என்பவரை கடந்த 2022ல் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கில் நாகை மாவட்ட நீதிபதி கந்தகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது பரமசிவம், பாக்கியவதி, மகாதேவன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் சமூகப்பணி உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு உளவியல், சட்டம், சமூகவியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்களை dsdcpimms.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து செப்.15 -க்குள் குழந்தைகள் நலத்துறை இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சேலம் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கீழ் எஞ்சின் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ITI, டிப்ளமோ & இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.18,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணல் செபடம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
நெல்லை மாவட்டத்தில், பாஜக பூத்கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷா நெல்லை வந்தடைந்தார். நயினார் நாகேந்திரன் வீட்டில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேல்முருகன், தமிழிசை மற்றும் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்க உள்ளனர். பின்னர் நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
நாமக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனத்தில் உள்ள, 63 சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் நாககுப்பம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் விரைவில் பணிகளை முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.