India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் உள்ளார்.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மருத்துவமனையில் ஜெனரேட்டர் முறையாக செயல்படாததால் மின்தடை நேரத்தில் பிரசவ வார்டுகளில் உள்ள குழந்தைகள், தாய்மார்கள் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் இன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
தென்காசி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் அனைத்து வகையான பள்ளிகளும் இன்று (ஜூன் 10ஆம் தேதி) திறக்கப்பட்டன. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே விடுதியுடன் இணைந்த பள்ளிகளில் விடுதிகள் திறக்கப்பட்டன. பெட்டி படுக்கையுடன் வந்த மாணவ மாணவிகள் தங்களுக்குரிய விடுதிகளில் காலையிலேயே சென்று தங்கினார்.காலை 7:00 மணி முதல் பள்ளிகள் மற்றும் விடுதிகள் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பின் ‘களை’ கட்ட தொடங்கின.
தமிழ்நாடு தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி இன்று (ஜூன் 10) நெல்லைக்கு வருகை தந்தார். தொடர்ந்து அவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்,மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆணையாளர்கள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தர்மபுரி அரசு கலை கல்லூரி 2024-2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை படிப்பிற்கான முதலாம் கட்ட கலந்தாய்வு (10/06/24), (11/06/2024), (12/06/2024) ஆகிய தேதிகளில் கல்லூரி கலையரங்கில் காலை 10.00 மணி முதல் நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் கட்டாயம் பெற்றோர்களுடன் கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயற்கை அவையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் இன்று(ஜூன் 10)வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் மற்றும் பலர் இருந்தனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு அஞ்சலக வங்கி கணக்கு எண் தொடங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் இன்று(ஜூன் 10)துவக்கி வைத்தார். இதில் மேசன் ராமநாதன், உதவி ஆட்சியர்(பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் மற்றும் பலர் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட கல்யாணமகாதேவி ஊராட்சி அணைக்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று நடைபெற்றது இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கினார் இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் குழந்தைகள் ஆவலோடு பள்ளிக்கு சென்றனர். இந்த நிலையில் நீலகிரியில் இன்று காலையில் இதமான காற்றோடு சாரல் மழை பெய்து வருவதால் பள்ளி குழந்தைகள் தற்காப்பு உடைகளை அணிந்து பள்ளிக்கு ஆனந்தமாக துள்ளி குதித்து சென்றனர்.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை திருமலை சமுத்திரத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தொடங்கி வைத்தனர். ஜூன் 10ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை மூன்று வாரங்களுக்கு நடைபெறும் இந்த முகாமினை விவசாயிகள் பயன்படுத்தி கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயில் இருந்து தற்காத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.