Tamilnadu

News June 13, 2024

எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர், மாவட்டக் அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம் எல் ஏ மாவட்ட எல்லையில் மலர் கொத்து வழங்கி வரவேற்றார். நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

News June 13, 2024

தி.மலை: பொதுமக்கள் குறைதீா் முகாம்

image

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீா் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களைப் பெற்று விசாரித்தாா் .

News June 13, 2024

நாமக்கல்: முட்டை விலை 5 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.138-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News June 13, 2024

கடலூர் மாவட்ட வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவானது.இந்த நிலையில் நேற்று கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News June 13, 2024

திருக்கோவிலூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைத்தேர்தலில் பயன்படுத்துவதற்காக 575 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருக்கோவிலூரில் இருந்து விக்கிரவாண்டிக்கு இன்று அனுப்பி வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 2 லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News June 13, 2024

தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கண்காணிப்பில் இருந்து வருகிறது.

News June 13, 2024

திருவாரூர் அருகே ஜூன்15-ல்  மின்தடை

image

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருவாரூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான அடியக்கமங்கலம், அலிவலம், புலிவலம், கூடூர், விளமல், மாங்குடி, முகுந்தனூர், விஜயபுரம் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் சப்ளை இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய திருவாரூர் மின்வாரிய அலுவலர் ராஜேந்திரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News June 13, 2024

நீலகிரியில் பதவி உயர்வு பெற்ற 26 பேருக்கு ஆணை எப்போது?

image

கடந்த 1999ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்து பணியாற்றிவந்து தற்போது ஏட்டுகளாக உள்ளவர்களுக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி 25 வருடம் நிறைவு பெற்றது. இதை அடுத்து அவர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் உத்தரவு ஆணை வழங்கப்பட்டது. நீலகிரியில் பதவி உயர்வு பெற்ற 26 பேருக்கு இதுவரை ஆணை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

News June 13, 2024

காஞ்சி: ரூ.38 லட்சம் காணிக்கை

image

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோவிலில், இன்று காணிக்கை உண்டியல் எண்ணப்பட்டது. அங்குள்ள 13 உண்டியல்களை திறந்து எண்ணப்பட்டதில், ரொக்கமாக ரூ.38,69,218 இருந்தது. மேலும், தங்கம் 84.730 கிராமும், வெள்ளி 207.140 கிராமும் இருந்ததாக, கோயில் செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.

News June 13, 2024

செங்கல்பட்டு: பரோட்டா சாப்பிட்டவர் மரணம்

image

பரோட்டா சாப்பிட்ட இளைஞர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே நேற்று சுப நிகழ்ச்சியில் பரோட்டா சாப்பிட்ட மோகனசுந்தரம் (28) என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உறவினர்கள் தனியார் மருத்துவமனை
கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இவர் ஏற்கனவே இருந்துவிட்டார் என தெரிவித்தனர்.

error: Content is protected !!