India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் கடும் கோடை வெப்பம் தொடங்கியுள்ள நிலையில், போலி மற்றும் காலாவதியான குளிர்பானங்களின் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து குளிர்பானங்கள் வாங்கும் போது ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து வாங்குமாறு சேலம் உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
தென்கரை கோட்டை அடுத்த ராமியம்பட்டி திரௌபதி அம்மன் கோயில் அருகே தருமபுரி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது மான் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் மாணவர்களுக்கு நடத்தப்படும், “TNSET 2024” தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று (மார்ச் 28) செய்தி வெளியிட்டுள்ளார்.
அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக இன்று கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
கரூரில் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 62 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று மாவட்ட தேர்தல் அதிகாரி தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. அதில், 56 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி கடந்த தினங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். இவர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பூத உடல் பூந்துறைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு வந்த தூத்துக்குடி எம்.பி.கனிமொழி நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று காலை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு அசையும் சொத்து ரூ.2 கோடியே 7 லட்சத்து 97 ஆயிரத்து 93 உள்ளது என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.28 லட்சத்து 62 ஆயிரத்து 500 என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக வேட்பாளர் ராதிகாவின் அசையும் அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.53,45,34,012 ஆக உள்ளது. இவருடைய மாற்று வேட்பாளர் சரத்குமாருக்கு அசையும் அசையா சொத்துக்கள் என 29,82,57,684 ஆக உள்ளது. காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் அசையும் அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.2,39,75,095 ஆகும். தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனின் அசையும் அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.17,95,59,371 ஆக உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பினை பொறுத்தவர, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப் பாதை பொதுநல வழக்கை வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுரேஷ்குமார் அமர்வு விசாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் மதுரை நீதிமன்ற பொதுநல வழக்கு விசாரணையில் ஆர் சுரேஷ் குமார் மற்றும் அருள் முருகன் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இனி கிரிவலப் பாதை வழக்கை விசாரிக்கும். மேலும் கிருஷ்ணகுமார் நீதிபதி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.