Tamilnadu

News March 29, 2024

தேர்தல் புகார்: அதிகாரிகள் எண்கள் வெளியீடு

image

மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, திருநெல்வேலியில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, தேர்தல் தொடர்பான புகார்களுக்கு சோனாலி பென்ஷோ வயங்கங்கர் 94899 63626, பங்கஜ் நைன் 9489 963739, காசி சுஹைல் அனீஸ் 94899 63627 என்ற எண்ணை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் நேற்று(மார்ச் 28) தெரிவித்துள்ளது.

News March 29, 2024

மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தேர்தல் விதிமுறைகள் குறித்து புகார் அளிக்க 8925533710 மற்றும் 8925533810 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் தேர்தல் விதிமுறைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் மேற்கண்ட என்னை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், எனக் கூறப்பட்டுள்ளது.

News March 29, 2024

வேலூர்: 2 லட்சம் பணம் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு சோதனை சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த சென்னையை சேர்ந்த ஜெகதீஷ் குமார் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து காட்பாடி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

News March 29, 2024

கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

image

சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார் அப்போது அவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய நாடாளுமன்றத்தில் பேசக்கூடியவர் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

News March 29, 2024

கலவை அருகே எஸ்பி ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளான குப்பிடிசாத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சொறையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வாழைப்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாலி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய மையங்களில் மாவட்ட எஸ்பி கிரண் சுருதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News March 29, 2024

பெரம்பலூர்: வியாபார சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்

image

மக்களவை தேர்தலை ஒட்டி திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு இன்று(மார்ச் 29) வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வியாபாரி சங்கப் பிரதிநிதிகளிடம் தமிழக முதல்வரின் சாதனைகளை எடுத்துரைத்து வியாபாரிகளும் பொதுமக்களும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

News March 29, 2024

கும்பகோணத்தில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி

image

கும்பகோணத்தில் நேற்று(மார்ச் 28) அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, புனித வெள்ளியையொட்டி இன்று (மார்ச் 29) காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிலுவை பாதை நிகழ்ச்சி நடக்கிறது.

News March 29, 2024

நெல்லை: மாயமான 8ம் வகுப்பு மாணவன் மீட்பு

image

திருநெல்வேலி அண்ணாநகரை சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவர் கமலேஷ் மகேந்திரா நேற்று மாயமானார். இது குறித்த புகாரில், ஜெயேந்திரா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனை போலீசார் திவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டவுண் அருகே சுற்றிக்கொண்டிருந்த கமலேஷை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் என்பவர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

News March 29, 2024

பஸ் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு எச்சரிக்கை

image

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற இருப்பதால் அனைத்து பஸ்களிலும் ஆளில்லாமல் பார்சல்கள் ஏற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு ஆளில்லாமல் பார்சல்கள் ஏற்றப்படுவது ஆய்வின் போது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

சென்னை: அரசு பெட்ரோல் பங்கில் கலப்பட பெட்ரோல்?

image

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு கூட்டுறவு பண்டகால சாலைக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் தனசேகர் என்பவர் பெட்ரோல் போட்டுள்ளார். இந்நிலையில், சிறிது தூரம் சென்ற பிறகு பைக் நின்று உள்ளது. மெக்கானிக் இடம் காண்பித்தபோது, பெட்ரோலில் கலப்படம் உள்ளதாக தெரிவித்தார். மீண்டும் பெட்ரோல் வாங்கி நுகர்ந்து பார்த்தபோது அதில் மண்ணெண்ணெய் கலப்படம் செய்தது தெரியவரவே போலீசில் புகார் அளித்துள்ளனர்.

error: Content is protected !!