India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “பொருளாதரத்தில் 11வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு வந்துள்ளது; இதுதான் பாஜகவின் வளர்ச்சி; சொத்துவரி, பால் வரி என அனைத்தையும் அதிகரித்துதான் திமுகவின் சாதனை; பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்கவில்லை என பேசி வருகிறார்.
கரும்புக்கான நிலுவை தொகையை வழங்கக் கோரி திருஆரூரான் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள், கும்பகோணம் கோட்டாட்சியரகத்துக்கு நேற்று(மார்ச் 28) வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்க முடிவு செய்து வந்தனா். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினா், உரிய அனுமதி பெற்ற பின்பு சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா். இதை ஏற்ற விவசாயிகள் மாா்ச் 30ம் தேதி சந்திப்பதற்கான மனுவை அளித்து சென்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணையாகும். இதன் மொத்த நீர்மட்ட உயரம்
105 அடி, கொள்ளளவு 32.8 டிஎம்சி ஆகும். இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 53.32 அடி, நீர் இருப்பு 5.27 டி.எம்.சி, நீர் வரத்து வினாடிக்கு 27 கன அடியாக உள்ளது . மேலும் பாசனம் மற்றும் குடிநீருக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவரது நண்பர் கவுசிக் இவர்கள் இருவரும் சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தனர். நேற்று காலை வழக்கம்போல் இருவரும் டூவீலரில் கல்லூரிக்கு சென்றனர். பல்லாவரம் மேம்பாலம் அருகே சாலையில் எதிர் திசையில் பயணித்தனர். அப்போது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி ஆகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கவுசிக் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை, சிங்காநல்லூர் பகுதியில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கோவை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் அதிமுக ஆட்சி காலத்தில் கோவைக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியையொட்டி இன்று நாமக்கல் தேவாலயங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனா்.
நாமக்கல் – துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் பேராலயத்தில் காலையில் இளைஞா் ஒருவா் சிலுவையை சுமந்தபடி வருவதும், அவா் அடித்து துன்புறுத்தப்படுவதும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நவாஸ்கனி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களை சந்தித்து ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் காரங்காடு கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்படும் என்றும் மின் பற்றாக்குறை சரி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.
போடியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனா். வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு குழந்தை திருமண தடை சட்டம், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
விருதுநகர், ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் இசக்கி (கர்ப்பிணி). இவரது ஸ்கேன் அறிக்கையை பார்க்காமல் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உடல் தொந்தரவுகள் காரணமாக மீண்டும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபோது குழந்தை இறந்து 3 நாட்கள் ஆகியுள்ளது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(மார்ச் 28) நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் தனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 31 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் 13 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.