Tamilnadu

News March 16, 2024

தேர்தல் கால புகார் எண் வெளியிட்ட மாவட்ட காவல்துறை

image

மக்களவைத் தேர்தல்-2024 வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (மார்ச் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல் கால புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1950,18004258373 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2024

பெரம்பலூர்: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!

image

பெரம்பலூர் வட்டம், செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாம்பாடி எனும் குக்கிராமம் பெரம்பலூருக்கு மிக அருகில் இருந்தபோதிலும், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராமத்திற்கு அரசு போக்குவரத்து வழித் தடம் இல்லை. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று(மார்ச் 16) பாலாம்பாடி கிராமத்தில் இருந்து பெரம்பலூருக்கு புதிய போக்குவரத்து வழித்தடத்தை எம்எல்ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

News March 16, 2024

நீலகிரி அருகே கூண்டில் சிக்கிய வேட்டை புலி

image

பந்தலூர் மீனாங்காடி பகுதியை சேர்ந்தவர் குரியன். இவரது கொட்டகையில், நுழைந்த புலி, ஆடுகளை வேட்டையாடி சென்றது. புகாரின் பேரில் வனத் துறையினர் கேமரா பொருத்தி புலியை கண்காணித்து வந்தனர். நள்ளிரவு கூண்டில் கட்டியிருந்த ஆட்டு குட்டியை தேடி வந்து வசமாக மாட்டிக் கொண்டது. இதனால் கிராம மக்கள் இன்று (மார்ச் 16) முதல் நிம்மதி அடைந்தனர்.

News March 16, 2024

மயிலாடுதுறை அருகே இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

image

சீர்காழி அருகே மேலையூரில் உள்ள சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சீர்காழி ஒன்றிய தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையேற்று மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் தேவேந்திரன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

News March 16, 2024

தேர்தல் எதிரொலி: ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் 48 பறக்கும் படை, 24 நிலையான கண்காணிப்பு குழுவும், தலா 6 வீடியோ கண்காணிப்பு குழுவும், வீடியோ பார்வை குழுவும், கணக்கியல் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் 3121 வாக்குப்பதிவு எந்திரங்களும், 1808 எந்திர கட்டுப்பாட்டு கருவிகளும், 2186 வாக்காளர் சரிபார்க்கும் தாள் கருவியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News March 16, 2024

திருவள்ளூர் அருகே ஆண் சடலம் மீட்பு

image

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த மேலூர் சீமை குளத்தில் அடையாளம் தெரியாத மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் மீஞ்சூர் போலீசார் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக இறந்திருக்கக்கூடும் என அறியப்படும் நிலையில் குளத்தில் தவறி விழுந்தாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 16, 2024

திருப்பத்தூர்: வாணியம்பாடி எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

image

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று வாணியம்பாடி பகுதியில் உள்ள வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர்.

News March 16, 2024

சிவகங்கை: போலி செய்தி அனுப்பிய பெண் கைது

image

சிங்கம்புணரி அடுத்த சிங்கமங்கலப்பட்டி பகுதியில் குழந்தைகளை கடத்த முயற்சி நடப்பதாக வாட்ஸ்அப் மூலம் போலி செய்திகள் வெளியானது. இது குறித்து எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்படி, எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வாட்ஸ்அப் மூலம் போலியான செய்தியை பரப்பியது ஒழுகமங்கலத்தை சேர்ந்த ஆனந்தவள்ளி என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 16, 2024

ரத்து..! நெல்லை கலெக்டர் அறிவிப்பு

image

வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறும். தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் தேதி தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்தன. இதனால் நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 16) தெரிவித்தார்.

News March 16, 2024

திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை

image

தமிழகத்தில் விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அது தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும்,  புதிதாக அச்சடிக்கப்பட்ட செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!